நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : உங்களிடம் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் இருந்தாலே போதும், நீங்களும் ஒரு முதலீட்டாளராக ஆகமுடியும்.

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Saturday, August 22, 2015

உங்களிடம் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் இருந்தாலே போதும், நீங்களும் ஒரு முதலீட்டாளராக ஆகமுடியும்.

உங்களிடம் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் இருந்தாலே போதும், நீங்களும் ஒரு முதலீட்டாளராக ஆகமுடியும். வருகிற ஜூலை-2015, 11 மற்றும் 12 ம் திகதி அன்று தமிழகத்தின் கோயம்புத்தூர் நகரில் அமைந்த சுகுணா கல்யாண மண்டபத்தில், சென்னையை சேர்ந்த குழு மற்றும் வர்த்தக கண்காட்சிகள் நிறுவனத்தின் "கோவை -முதலீடு எக்ஸ்போ -15" (Invest Xpo'15, a national-level exhibition and seminar on investment and business opportunities) என்கிற முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்பிற்கான, தேசிய அளவிலான வர்த்தக கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 2 நாட்கள் நடக்கும் கோவை முதலீட்டு கண்காட்சியில் சுமார் 40 அரங்குக் கூடங்கள் அமைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியை ஏற்று நடத்தும் குழு மற்றும் வர்த்தக கண்காட்சிகள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பிரதம நிறைவேற்று தலைவரான திரு வி,ஜே. கோபாலன் (Mr. V.J.Gopalan, Chairman and Chief Executive) அவர்கள் குறிப்பிடுகையில், இதேபோன்ற ஒரு கண்காட்சியை பொள்ளாச்சியில் நடத்தியபோது மிகப்பெரிய வரவேற்ப்பையும், அனைவருக்கும் சந்தையில் முதலீடு செய்வது பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியதொடு அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் வர்த்தக கண்காட்சி அமைந்திருந்ததால், பலர் முதலீடு செய்ய ஆர்வத்தோடு முன்வந்ததை போலவே கோவையிலும் அமையும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்,

மேலும் முதலீட்டாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும்விதமாக, மாநிலத்தின் நிலை-II மற்றும் நிலை-III நகரங்களில் இது போன்ற முதல்லீட்டாளர் கண்காட்சிகளை நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

செபி-SEBI மற்றும் தேசிய பங்குச் சந்தை-NSC (National Stock Exchange) மற்றும் பல் பொருள் பரிவர்த்தனை மையம்-MCX(Multi Commodity Exchange) போன்ற பங்குச் சந்தை நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பங்குச்சந்தை வல்லுனர்கள் என பலர், கண்காட்சிக்கு வருகைதரும் முதலீட்டாளர்களுக்கு, சந்தை முதலீடுகள் சார்ந்த கல்வி புகட்டுவது மற்றும் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து இலாபம் சம்பாதிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி, கோவையின் அனைத்து முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில் இந்தக்கண்காட்சி அமையும் என்று நிகழ்ச்சியை ஏற்று நடத்தும் குழு மற்றும் வர்த்தக கண்காட்சிகள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பிரதம நிறைவேற்று தலைவரான திரு வி,ஜே. கோபாலன் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார். http://www.investexpo.in/who-we-are.php

No comments:

Post a Comment

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.