நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : March 2019

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Friday, March 29, 2019

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-17*

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-17*
*(ஒள) பணத்தின், நேரத்தின், ஆற்றலின் மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-2* 

நேர மேலாண்மை பயிற்சி:- 

ஒரு மாணவனாக படிப்பில் நீங்கள் செலுத்தும் கவனம்,படிப்தற்கு ஒதுக்கப்படும் நேரம்,படிக்க வேண்டிய பாடங்களை சிறிது சிறிதாக உரிய காலகட்டத்தில் முடித்தல் ,திறம் பட திட்டமிடப்பட்ட நேர மேலாண்மை ஆகியவை உங்கள் இலக்கினை நோக்கி பயணப்பட உங்களுக்கு உதவும்.

திட்டமிட்ட பணிகளை பட்டியலில் உள்ளபடி முன்னுரிமை கொடுத்து செயல் படுத்தி வெற்றி பெற வேண்டும். "ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்" என்ற திருக்குறளுக்கு ஏற்ப காலத்தையும், இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால் பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

உதாரணமாக ஒரு மணி நேரத்தில் முடிக்கவேண்டிய வெவ்வேறுவகையான 10 வேலை தரப்பட்டது, அல்லது 10 வினாக்கள் மனப்பாடம் செய்யவேண்டும் என்று எடுத்துக்கொள்வோம் அந்த 10 வேலை அல்லது 10-வினாக்களில் 4 கடினமானவை மீதம் 6 மிக மிக எளிமையானது என்றால் நாம் எப்படி வேலைகளை அல்லது மனப்பாடம் செய்யும் கேள்விபதிலை சரியான நேரத்தில் முடிக்கமுடியும் என்பதுதான் இன்றய பயிற்சி விளையாட்டு. 

இப்போது நாம் பயிற்சி விளையாட்டிற்கு வருவோம் ஒரு மணிநேரத்தை 4 பகுதிகளாக பிரித்தால் அதில் ஒரு பகுதி 15நிமிடம் ஆகவே ஒவ்வொரு 15 நிமிடத்தில் எத்தனை வேலை அல்லது எத்தனை கேள்விக்கான பதில் மனப்பாடம் செய்து முடித்துவிட்டீர்கள் என்பது போட்டி. 

இந்த போட்டியில் வெற்றிபெறவேண்டுமானால், நாம் முதலில் மிக மிக எளிமையான 6 வேலைகளை செய்து முடிக்க முயற்சி செய்யவேண்டும் அப்படி செய்தால் முதல் 15 நிமிடத்தில் 3 அல்லது 4 வேலையை நாம் செய்து முடித்து வெற்றி என்ற இலக்கை நோக்கி எளிமையாக முன்னேறமுடியும். அடுத்த 15 நிமிடத்தில் அநேகமாக நாம் 6 எளிய வேலை அல்லது கேள்விக்கான பதிலையும் ஒரு கடினமான வேலை அல்லது கேள்வி பதிலையும் முடித்திருப்போம். ஆகவே கிட்டத்தட்ட 7 வேலை அல்லது கேள்விகளுக்கு பதில் எழுதி முடித்துவிட்டோம் என்கிற தன்னம்பிக்கையின் பலத்தில் மீதமிருக்கும் கடினமான வேலை அல்லது கேள்வி பதிலை மூன்றாவது 15 நிமிடத்திலேயே... கிட்டத்தட்ட அனைத்தையும் 45 நிமிட நேரத்திலேயே நாம் முடித்துவிட்டோம் என்பது ஒரு வெற்றி சாதனையாக இருக்கும்.

இதையே நாம் கடினமான 4 வேலை அல்லது கேள்விபதிலை முடித்துவிட்டு பிறகு 6 எளிமையான வேலை அல்லது கேள்விபதில் முடிக்கலாம் என்று நினைத்தால் முதல் 15நிமிடத்தில் ஒரு வேலை அல்லது ஒரு கேள்விக்கு கூட பதிலெழுதி மனப்பாடம் செய்து முடித்திருப்போமா என்றால் சந்தேகமே. அப்படி அந்த முதல் 15 நிமிட நேரத்திலேயே, நீண்ட நேரமாகிவிட்டது என்கிற பதற்றத்தில் நம்மால் முழுமையாக 10 வேலை அல்லது கேள்விபதில் பனப்பாடம் செய்யமுடியாமல் தோல்வியை தழுவியிருப்போம்.

ஆகவே எந்த வேலையானாலும் அல்லது மனப்பாடம் செய்யும் கேள்விபதிலானாலும் அதை மேற்க்கூறியவாறு எளிய வேலை, கடின வேலை என்று பிரித்து, எளிமையானவைகளை முதலில் செய்து முடித்து, நேர மேலாண்மை முறையில் ஒவ்வொரு வேலைக்கும் தேவையான நேரம் ஒதுக்கி சரியான நேரத்தில் நாம் செய்கிறோமா? என்று சரிபார்த்துக்கொண்டு, செய்யப்படும் எந்த வேலையும்  தோற்றுப்போனதாக சரித்திரமில்லை.  

என்ன சுடீஸ் இன்றய இந்த பயிற்சி விளையாட்டு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? எப்போதும் நீங்கள் நினைத்ததை சாதித்துவிட்டதாகவும், உங்கள் இலக்கினை அடைந்து விட்டதாக அடிக்கடி கனவு காணுங்கள். நிஜத்தில் அதற்கு தேவையான தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் சாதனை என்று செய்த செயல்களுக்காக யாரும் உங்களை பாராட்டவில்லை என்றால் அதற்காக கவலைப்படாமல் நீங்களே உங்களை பாராட்டிக்கொள்ளுங்கள். இப்படி செய்தால் உங்களுக்கு எப்போதும் வெற்றியே கிடைக்கும்.

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி 

*முன்னோட்டம்:-*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-18*
*(ஒள) பணத்தின், நேரத்தின், ஆற்றலின் மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-3* வியாபார கணக்கு விளையாட்டு

பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-4, (ஆ)மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-2

பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-4
(ஆ)மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-2
நாம் படிக்கும் பாடங்களில் உள்ள விஷயங்களுக்குத் தொடர்புடைய பொருளையோ அல்லது ஒரு ஓவியத்தையோ அல்லது ஏதாவது பாடலையோ அல்லது எண்களையோ நினைவில் வைத்துக்கொள்வது ஒரு நல்ல முறை. இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று பார்ப்போம்.

@நாம் இப்போது ஒரு அறிவியல் விதியை  மனப்பாடம் செய்யா உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.

நியூட்டன் முதல் விதி:-  ஒரு பொருளின் மீது புறவிசைகள் செயல்படாதவரை, அப்பொருளானது தன்னிச்சையாகத் தனது இயக்க நிலையை அல்லது ஓய்வு நிலையை மாற்றிக் கொள்ளாத பண்பு அதன் நிலைமம் (Inertia) எனப்படும். இதனால் முதல் விதியை நிலைம விதி எனலாம்.

இந்த விதியை அப்படியே ஒரு ஓவியமாக வரையவேண்டும், ஒரு ஓவியம் அல்லது புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்! என்பார்கள். A picture is worth a thousands of words! அதனால்தான் எந்த ஒரு ஓவியம் அல்லது புகைப்படம் நமது கண்களின் வழியே நமது மூளையில் மனப்பாடமாக பதிந்துவிடும் 

முதலில் 1.சதுரமான ஒருபொருள் வரையவும்  2.அதன் மீது புறவிசைகள் செயல்படாததை இடம் வலமாக அம்புக் குறிகளை பயன்படுத்தி ஓவியம் வரையவும். 3.அந்த பொருள் தனது இயக்க நிலை அல்லது ஓய்வு நிலையை மாற்றிக் கொள்ளாது என்பதை சதுர பொருளின் மேலும் கீழும் அம்புக்குறிகள் வரைந்து நகரவே நகராது என்பதை ஓவியத்தில் கொண்டுவரவேண்டும். இப்போது நீங்கள் வரைந்த ஓவியத்தை பார்த்தாலே 1,2,3 என நியூட்டன் முதல் விதி எளிமையாக ஞாபகத்தில் வரும். (உதாரண வரைபடத்தை பார்க்கவும்) 

@ நிறைய தகவல்களை மனப்பாடமாக வைத்திருப்போர் நல்ல முறையில் முடிவுகள் எடுக்கும் திறமை வாய்ந்தோராக உள்ளனர் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. உதாரணமாக தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் முடிவெடுக்கும் திறமைக்கு அவரது சிறந்த மனப்பாடத்திறமை காரணமாகக் கூறப்படுகின்றது.

@ பாடல் முறையில் அமைந்திருக்கும் கணித சூத்திரங்கள், சிற்ப சாத்திரங்கள், வர்ம சூத்திரங்கள், களரி அடி முறைகள் என பலவும் மனப்பாடம் செய்ய முற்காலத்தில் சுலபமாக இருந்ததால் நினைவுக்குக் கொணர எளிதாக அமைந்தன. அதனால படிக்கும் பாடங்களைக்கூட பாடலாக பாடி எளிமையாக மனப்பாடம் செய்யலாம். நான் படிக்கும்போது ஆங்கில வில்லியம் வாட்ஸ் வர்த்த( william wordsworth poems ) அவர்களின்  பாடலை அப்படியே சினிமாப்பாடல் மெட்டில் பாடி மற்ற மாணவர்களை அசத்தியும், எனது ஆசியரிடம் சபாஷ் என்கிற நல்ல பெயரையும் வாங்கினேன். 

வாருங்கள் சுட்டீஸ் இப்போது நாம் மனப்பாடம் செய்ய உதவும் பயிற்சி விளையாட்டு-2 விளையாட செல்வோம்.
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

*முன்னோட்டம்:-*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-5*
*(ஆ)மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-2*

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.