நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Wednesday, July 11, 2018

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-18* வியாபார கணக்கு விளையாட்டு:- MBA முருங்கைக்காய் வியாபாரம்:-

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-18*

*(ஒள) பணத்தின், நேரத்தின், ஆற்றலின் மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-3*  வியாபார கணக்கு விளையாட்டு:- MBA முருங்கைக்காய் வியாபாரம்:-
  
காண்கு, நாக்கு என்ற இரண்டு நபர் முருங்கைக்காய்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்ய முனைந்தனர். 

இருவருக்கு தலா ருபாய் 10/- வியாபாரம் செய்வதற்கு மூலதனமாக தரப்பட்டது. அந்த 10 ரூபாயை வைத்து ஒரே நாளில் முருங்கைக்காய் வாங்கி விற்று யார் அதிகம் லாபம் சம்பாதிக்கிறார்களோ அவர்களே வெற்றிபெற்றவர்கள். என முடிவுசெய்து அன்றய மாலை  6மணிக்கு இருவரும் ஒன்றுகூடி போட்டியின் இறுதியை  முடிவுசெய்யலாம் என்று முடிவானது.

இருவரும் அவர்களிடம் உள்ள ரூபாய் 10 ஐ வைத்து,  தலா 20 முருங்கைக்காய்களை வாங்கி அவற்றை விற்று லாபம் சம்பாதிக்க வெவ்வேறு பகுதிக்கு புறப்பட்டார்கள். அதாவது ஒரு முருங்கைக்காயின் கொள்முதல் விலை  0.50 பைசா.  
நாக்கு:- இவர் இனிமையாக பேசக்கூடியவர் தனது பேச்சாலேயே அனைவரையும் கவர்ந்த இழுக்கக்கூடியவர் அதோடு இவர் எதையும் வேகமாக செய்யும் எண்ணம் கொண்டவர் அவர் வாங்கிய 20 முருங்கைக்காய்களை ஒன்றின் விலை ரூபாய் ஒன்று (1.00) என கூவி விற்கத்தொடங்கினார். முதல் ஒருமணிநேரத்தில் நான்கு  4 காய்கள் மட்டுமே விற்றது ஆகவே அவர் தமது முந்தய விலையை சற்று குறைத்து 0.75 காசுகள் என விலை குறைத்து விப்பாணை என கூவி விற்கத்தொடங்கினார். அடுத்த ஒரு மணி நேரத்தில் எட்டு (8) காய்கள் விற்றுத் தீர்ந்தது. அடுத்த ஒரு மணிநேரத்தில் மீண்டும் விலை குறைத்து 0.50 காசுகள் என, "வாங்கிய விலையிலேயே விற்பனை" என கூறி விற்கத்தொடங்கினார். அப்போது 4 காய்கள் மட்டுமே விப்பாணையானது. மீதமிருந்த 4 காய்களை மிகக் குறைந்த விளையான 0.25 பைசாவுக்கு நஷ்டத்தில் விற்றூற்றுமுடித்தார். ஆகமொத்தம் அவரின் 4மணிநேர விற்பனைத் தொகை 4+6+2+1= 13 ரூபாய் கிடைத்தது.  கிடைத்த பணத்தை முழுவதுமாக செலவு செய்து 26 முருங்கைக்காய்களை வாங்கி மீண்டும் மேற்கண்டதைப்போலவே விற்பனையை தொடர்ந்தார் அன்று மாலை 6 மணியளவில் அவரிடம் இருந்த அனைத்து முருங்கைக்காய்களையும் விற்று மொத்தம் 28 ரூபாய்களை சம்பாதித்தார் அதாவது 18 ரூபாய் அதிகமாக லாபம் சம்பாதித்தார்.     

காண்கு:- பார்ப்பதற்கு சுறுசுறுப்பானவர். எதையும் அழகுபடுத்தி விப்பாணை செய்வதில் வல்லவர். அவருக்கு பசுமையான புதிய முருங்கைக்காய் மீது அதிக நம்பிக்கை வைத்து விற்பனையை தொடர்ந்தார்  அவர் வாங்கிய 20 முருங்கைக்காய்களை ஒன்றின் விலை இரண்டு ரூபாய் (2.00) என கூவி விற்கத்தொடங்கினார். அடுத்த ஒரு மணிநேரத்தில் 2 காய்கள் மட்டுமே விற்பனையாகியது. ஆகவே அவர் வைத்திருந்த முருங்கைக்காய் வெய்யில் பட்டு சற்று வாடி வாதங்கத் தொடங்கியது ஆகவே அவர் மேலும் விலை குறைத்து 1.50 ஒரு ரூபாய் ஐம்பது காசுக்கு ஒன்று என்று விற்கத்தொடங்கினார். அடுத்த ஒரு மணி நேரத்தில் மேலும் 4 காய்கள் மட்டுமே விற்றது. ஆகவே மீண்டும் விலை குறைத்து 1.00 ஒரு ரூபாய்க்கு ஒன்று என விற்கத் தொடங்கினார் அப்போதும் 4 காய்கள் மட்டுமே விற்றது ஆகவே தொடர்ந்து மீண்டும் விலை குறைத்து 0.75 எழுபத்தி ஐந்து காசுக்கு ஒன்று என்று விற்கத் தொடங்கினார் அப்போதும் முருங்கைக்காய் சற்று வாடி வதங்கிவிட்டபடியால் 4 காய்கள் மட்டுமே விற்பனையானது ஆக அன்றய மாலை 6 மணியளவில் மீதமிருந்த 6 காய்களை வாங்கிய விலைக்கே விற்றுப்பெற்ற தொகையாக மொத்தம் 4+6+4+3+3=20 ரூபாய்.

இப்போது   காண்கு:- 20 ரூபாயும், நாக்கு:- 28 ரூபாயையும் சம்பாதித்தார் ஆகவே அதிகம் சம்பாதித்த நாக்கு வெற்றிபெற்றவராவார். 

இதில் முக்கியமாக நாம் தெரிந்துகொள்வது, நஷ்டத்தில் வியாபாரம் செய்தாலும் நாக்கு திறமையாக அதிகம் லாபம் சம்பாதித்தார், மேலும் நம்மிடமுள்ள முதலீட்டை ஒரு இடத்தில் தங்கிவிடாமல் விரைந்து செயல்பட்டு பலமடங்காக்கிய விதம் அவருக்கு நன்மை கிடைப்பதோடு, அதிக முறை வாங்கி விற்று செலவு செய்வதால் ஒரு நாட்டின் வளர்ச்சியிலும் அவர் சிறந்த பங்குவகிக்கிறார். 

ஆகவே சிறந்த விற்பனையாளர் என்பவர், அவரது விற்பனை விற்றுத் தீரும்வரையில் காத்திருப்பதைவிட. புத்திசாலித்தனமாக ஏற்றத தாழ்வுகள் இருந்தாலும் வேகமாக கிடைக்கும் விலைக்கு விற்று,  மேலும் மேலும் பல விற்பனைக்கு தாவுவதே சிறந்த விற்பனை தந்திரமாகும். 

நஷ்ட விற்பனை விலையிலும் லாபம் சம்பாதிக்கும் இந்த முருங்கைக்காய் வியாபார உதாரணம், முதுகளைப் பட்டதாரிகளுக்கான  எம் பி ஏ படிப்பின் ஒரு பகுதி பாடம் இது. 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.  

என்ன சுட்டீஸ் நேரத்தின் மதிப்பு பணத்தின் மதிப்பைவிட உயர்ந்தது என்பதை தெரிந்துகொண்டீர்களா?

வாருங்கள் நமது நாளை மறுநாள் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டில் சிந்திப்போம்.

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

முன்னோட்டம்:-
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-19*

*(ஒள) பணத்தின், நேரத்தின், ஆற்றலின் மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-4*. ஒருநாள் என்பது நமக்கு 30மணி நேரம் ஆனால் மற்றவர்களுக்கு அது வெறும் 24மணி நேரம்

Monday, July 9, 2018

பயிற்சி விளையாட்டு:- அறிவுக்கு வேலைகொடு புதிர் போட்டி பரிசுகள்.

பயிற்சி விளையாட்டு:- அறிவுக்கு வேலைகொடு புதிர் போட்டி பரிசுகள்.

தினமும் காலையில் 2 மணிநேரமும், மாலையில் 2 மணிநேரமும், மாநகர வாரியம் பொது மக்களுக்கு குடிநீர் வழங்குகிறது.

அது ஒரு வீட்டின் மேற்பகுதியில் பொருத்தப்பட்ட தண்ணீர் தொட்டி. 
அதன் கொள்ளளவு 300 லிட்டர்.

அந்த தண்ணீர் தொட்டியை நிரப்புவதற்காக ஒரு மாநகர குடிநீர் வழங்கும் தண்ணீர் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. 

தினமும் காலை மாலை இரண்டு நேரமும் இரண்டு மணி நேரத்தில் அந்த தண்ணீர் தொட்டி முழுவதும் நிரம்பி வழிவதுண்டு. 

தண்ணீர் தொட்டியை நிரப்பும் குழாய் பழுது ஏற்பட்டதால் அந்தக்குழாயிலிருந்து ஒரு நொடிக்கு ஒரு சொட்டு தண்ணீர் எப்போதும் வெளியேறிக்கொண்டே இருக்கிறது.  

தண்ணீர் குழாயின் நேர் கீழே ஒரு 300 லிட்டர் கொள்ளவு கொண்ட தண்ணீர் தொட்டி இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட விவரங்களை கவனமாக படித்து நன்கு புரிந்துகொண்டு கீழ் கண்ட  வினாக்களுக்கு விடையைக்கூறி பரிசுகளை வெல்லுங்கள். 

1. அந்த தண்ணீர் தொட்டி எத்தனை மணி நேரத்தில் முழுவதும் நிரம்பும்.

2. பழுது ஏற்பட்ட குழாயிலிருந்து ஒரு நாளைக்கு வெளியேறும் நீரின் அளவு என்ன?

3. வீணாக வெளியேறிய தண்ணீரின் அளவு என்ன?

4. நீர் வீணாகாமல் தடுக்க என்ன வழி?

5. வீணாகும் நீரை எப்படி பயன்படுத்தலாம்?

சரியான விடையை அடுத்த பதிவில் தெரிவிக்கப்படும்.

எங்கே நீங்கள் உங்களின் திறமையை உபயோகித்து கேள்விக்கான பதிலை கூறுங்கள் பார்க்கலாம்.

போட்டியில் பங்குகொள்ள நினைக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது நன்றிகள். 

இப்படிக்கு கோகி-ரேடியோ மார்க்கோனி.


*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-20* *(ஒ) சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி விளையாட்டு-2*

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-20*
*(ஒ) சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி விளையாட்டு-2* 

ஹலோ சுட்டீஸ் இனிய மாலை வணக்கங்கள். இன்றய பயிற்சி விளையாட்டில் சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி.

நமது இயல்பு வாழ்க்கைக்கு, உழைப்பு, உணவு, அத்தியாவசிய தேவைகளாக இருக்கின்றன. பயிற்சிகளும், இயற்கை உணவுகளும், நம்முடைய ஆரோக்கியத்தை வலுவூட்டுகின்றன. ஆனால், காலையில் எழும் போது சோம்பல் தலைதூக்குகிறது. நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று, இன்றைய காலையை கடத்துகிறோம். இதனால், நமது சுறுசுறுப்பு குறைகிறது மெட்டாபாலிசம் சீர்குலைகிறது.
உடல் திசுக்களில் லேக்டிக் அமிலம் சேர்ந்து தசை இறுக்கத்தை அதிகரிக்கிறது மனதில் அழுத்தம் உருவாகிறது. சோம்பல், அசதி, கூடி வாழ்வின் உத்வேகம் குறைகிறது. பிணிகள் எளிதில் நம்மை அடிமைப்படுத்துகின்றன. 

விளையாட்டு இதில், முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. விளையாட்டு, உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி, சீரான இயக்கம், இறுக்கம், அழுத்தம் சீர்படுவதுடன், மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையை தருகின்றன.நன்றாக பசியெடுத்து, நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது. எனவே, நமது அன்றாட இயக்கங்களில், கடின உழைப்பு, விளையாட்டு போன்ற காரணிகளையும், யோகா, தியானம் போன்ற அம்சங்களையும் மேற்கொள்வது நல்லது. எனவே, உழைப்பு, பயிற்சிகள், விளையாட்டு கிட்டாத தேகத்துக்கு மாற்றாக, நடைபயணம், நடைபயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். 

நகர்ப்புறங்களில் வாழ்பவர்களுக்கு நீச்சல், வேக ஓட்டம், மெது ஓட்டம், உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொள்வது, தோட்ட வேலை, நாட்டியம் ஆகியவை, மிகச்சிறந்த பயிற்சிகளாக உள்ளன.  

நகர்ப்புறங்களில் வீட்டு வளாகத்தில், வீட்டு மாடி, பால்கனி பகுதியில் சிறிய தோட்டம் அமைத்து, அதன் பணியில் களமிறங்கினால், வேலை செய்த திருப்தியும், தரமான காய்கறிகள் கிடைத்த மகிழ்ச்சியும் கிடைக்கும்.

சரி வாருங்கள் இன்றய பயிற்சி விளையாட்டிற்கு போகலாம் 

நகரத்தில் சுகந்திரமான விளையாடும் இடம் பார்ப்பது அரிதாகிவிட்டது. வீட்டிற்கு வெளியே விளையாட செல்லலாம் என்றாலே... கவனக்குறைவாக ஏதாவது விபத்து நேர்ந்துவிடுமோ என்று பெற்றோர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது, சிறுவர்கள் விளையாட்டில் ஏதாவது கவனக்குறைவால் விபத்துகள் ஏற்படுமோ என்ற பயம். அதனால் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியில் விளையாட அனுப்பாமல் வீட்டிற்குள்ளாகவே விளையாட சொல்வது. 
வாழ்க்கையே ஒரு சதுரங்கம்தான்! சதுரங்கம் (Chess) என்னும் விளையாட்டு:-

நமது இலக்கை அடைய பொறுமை, நிதானம், சரியான திட்டமிடுதல், விடாமுயற்சி, சுயசிந்தனை, தன்னம்பிக்கை போன்றவை தேவை. இத்தகைய பண்புகளை வளர்க்க சதுரங்கம் (Chess) என்னும் விளையாட்டு உதவும்.
நமது வாழ்வில் சந்திக்கும் இடர்களை களைவது எப்படி?

நம்மை சுற்றி உள்ள வளங்களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது?

தடைகளை கடந்து எவ்வாறு இலக்கை அடைவது?

சுயமாக சிந்திக்கும் ஆற்றலை எவ்வாறு வளர்ப்பது?

இலவசமாக கிடைக்கும் காற்றை பயன்படுத்தி மனஅழுத்தத்தை களைவது மற்றும் மூளையை நன்றாக செயல்பட வைப்பது? போன்ற பல கேள்விகளுக்கான பதிலும், பயன்களும் நமது பயிற்சி விளையாட்டில் உள்ளது.  

சரி வாருங்கள் இன்றய பயிற்சி விளையாட்டிற்கு போகலாம்:-

பூப்பறிக்க வருகிறோம் என்று ஒரு பாட்டை பாடிக்கொண்டே விளையாடும் விளையாட்டு ஒன்று இருக்கிறது. அந்த பயிற்சி விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க இன்று அந்த விளையாட்டை நாம் விளையாடுவோமா?.

சிறுமியர் குழுவாக இணைந்து ஆடும் விளையாட்டு இது. சிறுமியர் பூக்குழு, பூப்பறிக்கும் குழு என இரு குழுக்களாகப் பிரிந்து எதிர்எதிர் வரிசையில் நின்று கொள்வர். 

பூக்குழுவில் இடம்பெறும் சிறுமியர் ஒவ்வொருவரும் ஒரு பூவின் பெயரைத் தங்களுக்குச் சூட்டிக் கொள்வர் (சிலர் தங்கள் பெயருக்குப் பின்னால் தேவி பூ, கமலா பூ, எழில் பூ என்று சூட்டிக் கொள்வதும் உண்டு). யார் யார் எந்தப் பூவின் பெயரைச் சூட்டியுள்ளனர் என்பது பூப்பறிக்கும் குழுவிற்குத் தெரியாது. பூப்பெயர் தெரியாத நிலையில் தேவி பூ, கமலா பூ என்று பெயரைக் குறிப்பிட்டே அழைப்பதும் உண்டு. 

பூப்பறிக்கும் குழுவினருக்குத் தனிப் பெயர் சூட்டப்படுவதில்லை. அவர்கள் பூ பறிக்கும் செயலை மட்டும் செய்வார்கள். 

முதலில் பூப்பறிக்கும் குழு எதிர்வரிசையில் நிற்கும் பூக்குழுவை நோக்கி, "பூப்பறிக்க வருகிறோம்", "பூப்பறிக்க வருகிறோம்" என்று பாடிக் கொண்டே முன்னேறிச் செல்வர். பின்பு பூக்குழுவினர் "எந்தப் பூவைப் பறிக்கிறீர்?" "எந்தப் பூவைப் பறிக்கிறீர்?" என்று பாடிக் கொண்டு முன்னோக்கி வருவர். பூக்குழு முன்னோக்கி வரும்போது பூப்பறிக்கும் குழுவினர் பின்னோக்கிச் செல்வர். மீண்டும் பூப்பறிக்கும் குழுவினர் "தேவி பூவைப் பறிக்கிறோம்", "தேவி பூவைப் பறிக்கிறோம்" என்று பாடிக் கொண்டு முன்னோக்கிச் செல்வர். இப்படியாக இரு குழுவினரும் பாடிக் கொண்டே முன்னோக்கியும் பின்னோக்கியும் சென்று வருவர்.

இறுதியில், பறிக்கப் போகும் பூ அடையாளப் படுத்தப்பட்டவுடன் அடையாளப் படுத்தப்பட்ட சிறுமியும் பூவைப் பறிக்கும் குழுவிலிருந்து ஒரு சிறுமியும் முன்னால் வந்து எதிர்எதிர் நின்று கொள்வர். குழுவிலுள்ள ஏனையோர் ஒருவர் பின் ஒருவராகக் கயிறு இழுக்கும் போட்டியில் நிற்பதைப் போல் நின்று கொள்வர். பின் பூப்பறிக்கும் குழுவினர் தாங்கள் விரும்பிய பூவைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி மேற்கொள்வர். பூவைப் பறித்துத் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு மீண்டும் விளையாட்டைத் தொடருவர். கடைசிப் பூவைப் பறிக்கும் வரை விளையாட்டுத் தொடர்ந்து கொண்டே இருக்கும். (இவ்விளையாட்டில் இடம்பெறும் பாடல் விளையாட்டுப் பாடல்கள் என்னும் பகுதியில் முழுமையாகத் தரப்பட்டுள்ளது.)

பூக்களின் பெயர்களை அறிதல், மாதங்களின் பெயர்களை அறிதல், இழுவைப் போட்டி, உடல் திறன் என்று மகிழ்ச்சியாக இவ்விளையாட்டு ஆடப்பெறும்.

என்ன சுட்டீஸ் இந்த விளையாட்டு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? 

மீண்டும் நாளை மறுநாள் வேறு ஒரு பயிற்சி விளையாட்டில் சந்திப்போம், நன்றி வணக்கம் கோகி-ரேடியோ மார்கோனி.

*முன்னோட்டம்:-*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-21*
*(ஐ) துப்பறியும் பயிற்சி விளையாட்டு-1.*


Thursday, June 7, 2018

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-19* ஒருநாள் என்பது நமக்கு 30மணி நேரம் ஆனால் மற்றவர்களுக்கு வெறும் 24 மணி நேரம் மட்டுமே.


ஹலோ சுட்டீஸ் இனிய மாலை வணக்கம்,

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-19*
*(ஒள) பணத்தின், நேரத்தின், ஆற்றலின் மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-4*  

ஒருநாள் என்பது நமக்கு 30மணி நேரம் ஆனால் மற்றவர்களுக்கு வெறும் 24 மணி நேரம் மட்டுமே. அது எப்படி என்று அந்த விளையாட்டை விளையாடி தெரிந்துகொள்வோமா?. 

வேகமாக இயங்கும் இயந்திர உலகில் ஒருநாள் என்பது ஆரம்பித்ததுமே முடிந்துவிடுவது போல உள்ளது. இன்றைக்கு என்ன செய்ய போகிறோம் என்பதை திட்டமிட்டு செய்ய வேண்டும் என்பார்கள். இன்று திட்டமிடவே பாதி நாட்கள் போய் விடுகிறது என்று கூறுபவர்களும் உள்ளனர்.
ஆனால், அதே நேரத்தில் ஒரு நாளை சிறப்பாக கையாளும் ஆளுமை திறன் கொண்டவர்களும் உள்ளனர். ஒரு நாளில் எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும்? எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்படுபவர்களும் உள்ளனர். அவர்களது ஒருநாள் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.

புல்லட் ட்ரெயினாய் பறக்கும் நேரத்தை யாராலும் நிறுத்தி வைக்கமுடியாது. ஆனால் அந்த நேரத்தை குறித்து அலர்ட்டாக இருந்தால் டன் கணக்கில் சாதிக்கலாமே! நம் மூளை, காலத்தை எப்படி புரிந்துகொள்கிறது,  நேரத்தை எப்படி உணர்ச்சிகள் உறிஞ்சுகின்றன, நேரத்தினை குறைத்து மகிழ்ச்சியான வாழ்வை அதிகப்படுத்துவது எப்படி என சொல்லித்தரும் ரைமிங் அண்ட் சூப்பர் டைமிங் விளையாட்டுத்தான் இந்த பயிற்சி விளையாட்டு.

நேரத்தை ரசித்து ருசித்து அனுபவிக்கும்போது அதன் அருமை புரியும்:-

பாடல் :- நிலாக் காய்கிறது, நிறம் தேய்கிறது, யாரும் ரசிக்கவில்லையே ....இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்....
  
பாடல் {....இன்னும் கொஞ்சநேரம் இருந்தாதான் என்ன? ஏன் அவசரம் என்ன அவசரம்.. நில்லு கண்ணே...}

பயிற்சி விளையாட்டு:- கேட்கப்படும் கேள்விக்கு ஒரு நிமிட நேரத்திற்குள் பதிலளிக்கவேண்டும். தவறான பதிலுக்கு உங்களுக்கு தரப்பட்ட நேரத்திலிருந்து இரண்டு (2) நிமிடம் கழிக்கப்படும். சரியான விடையையும் அதை ஒரு நிமிடத்திற்கு முன்னதாக கூறினால் மேலும் ஒரு நிமிடம் உங்களது கணக்கில் சேர்க்கப்படும். பதில் தெரியாவிட்டால் பாஸ் என்று கூறியோ அல்லது அமைதியாக இருந்து அந்த ஒரு நிமிடத்தை செலவு செய்து தப்பித்துக்கொள்ளலாம்.  இப்போது பயிற்சி விளையாட்டை விளையாடலாம் வாங்க.

இந்த விளையாட்டில் நீங்கள் கவனமாக இருக்கவேண்டியது தவறான பதிலை கூறி அதிக நேரத்தை இழக்கக்கூடாது. விடை தெரியவில்லை என்றால் அமைதி காத்து ஒரு நிமிட நேரத்தை செலவு செய்து தப்பித்துக்கொள்ளலாம். விடை தெரிந்தால் உடனே ஒரு நிமிடத்திற்குள் கூறி மேலும் ஒரு நிமிட நேரத்தை சேமிக்கலாம். ஆகவே இந்த விவரங்களை நன்கு நினைவில் வைத்திருந்தாலே நேரத்தை சேமித்து வெற்றிபெறலாம். சரிதானே சுட்டீஸ் நீங்களும் இந்த விளையாட்டும் விளையாடிப்பாருங்கள். நீங்கள் எத்தனை மணித்துளிகளை சேமித்தீர்கள் என்று கணக்கிட்டு வெற்றிபெறுங்கள். 

உங்களின் வாழ்க்கையின் வெற்றி வாய்ப்பிற்கு கீழ்கண்டவைகளை உங்களின் கவனத்தில் வையுங்கள் எதிர்காலத்திற்கு உங்களுக்கு பயன்படும்.  ஒரு தொழிற்ச்சாலையின், ஒரு நாளின் 24மணி நேர உற்பத்தியை, அதே 24மணி நேரத்தில் (ஒருநாளின்) 30மணிநேர உற்பத்தியாக்கி(அதாவது ஒவொரு 8 மணி நேரத்தில், 10 மணி நேர உற்பத்தி = 2 மணி நேர கூடுதல் உற்பத்தி 3shift x 8+2 =30Hrs)-லாபத்தை செயலில் செய்து காட்டிவிட்டால் எப்படிப்பட்ட நிறுவனமாக இருந்தாலும் அசந்து போவார்கள்" அப்படி அந்த தொழிற்ச்சாலையில் பணிபுரியும் பலரது  ஒருநாளாய 6 மணி நேரத்திற்கான சம்பளத்தை ஒரு பெரிய தொழிற்சாலைக்கு மிச்சமாககுகிறீர்கள் என்றால் ஒரு மாதத்தில் அந்த தொகையானது ஒரு பெரிய தொகையாகவே இருக்கும்.  "நேரத்தை, ஆற்றலை, பணத்தை  மிச்சப்படுத்துவதுடன்,  இரட்டிப்பாக்குவது எப்படி என்று சிந்தியுங்கள் பல உண்மைகள் உங்களுக்கும் புரியும்"

உதாரணமாக அறிவியல் முறை வேலை நேரம் என்பார்கள். ஒருவர் ஒரு நாளின் வேலை நேரமான 8 மணி நேரத்தில், 100 வாகன டயர்களை பொருந்துகிறார் என்றால், அவருக்கு அந்த வேலை பழக பழக அவர் மேலும் அதிவேகமாக அவரின் வேலையை செய்வார் ஆகவே அவர் 100 வாகன டயர்களை பொருத்தும் வேலையை 6மணி நேரத்திலேயே முடித்துவிடுவார் அல்லது அவரது 8 மணி நேர வேளையில் 125 வாகன டயர்களை பொருத்தியிருப்பார். அதாவது 25 டயர்கள் பொருத்தும் வேலையை அதிகமாக செய்திருப்பார். 

ஆகவே 8 மணி நேர வேலையை நேரத்தை சேமித்து 6 மணி நேரத்திலேயே முடித்துவிடுவார். அல்லது மேலும் 2 மணி நேர அதிக அளவிலான உற்பத்தியை செய்திருப்பார்.  

சுட்டீஸ் இது உங்கள் வீட்டில் வேலைக்கு போகும் உங்களது பெற்றோர்களான அப்பா அம்மா அவர்களுக்கு இந்த உதாரணத்தை எடுத்து சொல்லுங்கள் எப்போதும் அலுவலகம் வேலை என்று உங்களை கவனிக்காமல் உங்களோடு வீட்டில் சந்தோசமாக நேரத்தை செலவு செய்ய தெரியாத உங்களது பெற்றோர்களுக்கு நீங்கள்தான் விவரமாக எடுத்து கூறவேண்டும்... "என் பாசத்திற்குரிய அப்பா அல்லது அம்மா, முதலில் நீங்கள் உங்களது அலுவலகத்தில் உங்களது வேலை எது என்று நன்கு தெரிந்துகொண்டபின், அந்தப் பணியை சிறப்பாக செய்வதோடு நேரத்தை மிச்சம் பிடித்து அந்த நேரத்தில் உங்களது சுய முன்னேற்றத்திற்கான பணியையும் உங்களது குடும்பம், பிள்ளைகள்  சார்ந்த பணிகளை செய்தால் தான் எனது பெற்றோர்களான நீங்கள் சிறப்பான இடத்தை அடையமுடியும். அதற்க்கு உங்களது அலுவலகப்பணியை குறித்த நேரத்திற்கு  முன்பாகவே முடியுமாறு செய்து முடித்து, அதில் கிடைக்கும் உபரி நேரத்தில் எங்களுக்கும் உங்களோடு விளையாட நேரம் ஒதுக்கவேண்டும் என்று கூறுங்கள்.

உதாரணமாக ஒருவரின் அலுவலக வேலை 8-மணி நேரம் என்றால், நீங்கள் 8-மணி நேரத்தில் செய்யவேண்டிய வேலையை 6-மணி நேரத்திலேயே செய்து முடித்துவிட்டு 2-மணி நேரத்தை மிச்சப்படுத்தி உங்களின் சொந்த குடும்பத்திற்காகவும் அதோடு உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளும் செயல்களை செய்து சிறப்பான நிலையை அடைய பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.ஆகவே ஒரு நாளைக்கு 24மணி நேரம்  என்றால், ஒவோவ்று 8-மணி நேரத்தில் நீங்கள் சேமிக்கும் 2மணி நேரம் உங்களுடைய மகிழ்ச்சியான நேரமாக"அப்பாவின் நேரமாக", உங்களின் குடும்ப உயர்வுக்காக மட்டும் செலவு செய்யக்கூடியதாக, ஒருநாளைக்கு  6மணி நேரம் உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது ஒரு நாள் என்பது உங்களுக்கு (நாள் 24 மணி + உங்களுடைய சேமிப்பு  6 மணி  = 30மணி நேரம்). மற்றவர்களுக்கு வெறும் 24மணி நேரம். "அதாவது உங்களுக்கு பணம்பழம போன்ற நெல்லிக்கனி" புரிகிறதா? என்ன சுட்டீஸ், நீங்கள்தான் இந்த உதாரணங்களைக் கூறி உங்களின் பெற்றோர்களிடம் கேட்கவேண்டும். 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

*முன்னோட்டம்*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-20*
*(ஒ) சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி விளையாட்டு-2* 

Monday, June 4, 2018

(ஐ) துப்பறியும் பயிற்சி விளையாட்டு-1.*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-21*

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-21*
*(ஐ) துப்பறியும் பயிற்சி விளையாட்டு-1.*

*ஹலோ சுட்டீஸ் இந்த வாரம் முழுவதும் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு (ஐ) துப்பறியும் பயிற்சி விளையாட்டு.  ஆர்வத்தைத் தூண்டும் துப்பறிதல் துறை, துப்பு துலக்குதல் பற்றி தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டுக்கள். மறந்துவிடாதீர்கள் பயிற்சி விளையாட்டு பகுதி 21 முதல்....அனைத்தும் மிகச்சிறந்த வாழ்க்கையில் அவசியம் தெரிந்துவைத்திருக்கவேண்டிய முக்கியமான பயிற்சி விளையாட்டுக்கள்.*

சுட்டீஸ்களிடம், "நேற்று உன்னிடம் என்ன சொன்னேன்?" என்று அம்மாவோ அல்லது அப்பாவோ கேட்பது, சுட்டீஸ்களின் நினைவாற்றல் எந்த அளவில் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள, அது வெறும் மூளைக்கு தரும் பயிற்சிமட்டுமே. ஆனால் துப்பறியும் விளையாட்டு மூளையின் அறிவுத்திறனுக்கும், செயல்பாடுகளின் தன்மைக்கும் சவாலாக அமைந்த ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டில் உடலுழைப்பும்  அறிவுத்திறனையும் பயன்படுத்தி விளையாடும் ஒரு விளையாட்டு இது. 

வாங்க இன்றய விளையாட்டை விளையாடுவதற்கு முன்பாக துப்பறியும் துறைசார்ந்த சில விவரங்களை நாம் தெரிந்துகொள்வோம்.

துப்பறிவதைப்பற்றி சுட்டீஸ்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்போம். அதோடு நான் தொகுத்திருக்கும் சில சுவாரிசயமான துப்பறியும் தகவல்களையும் தருகிறேன்.

@ சுட்டீஸ்:- துப்பறியும் கதை என்று சொன்னாலே எனக்கு சினிமாவில் ஜேம்ஸ் பாண்ட் செய்யக்கூடிய சாகசங்கள்தான் ஞாபகம் வரும்.    

@கோகி(நான்):-துப்பறியும் கதைகளின் ராணியாகத் திகழ்ந்தவர் அகதா கிறிஸ்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாவல்கள் உலகெங்கும் கோடிக்கணக்கில் விற்பனையாகி இருக்கின்றன. ஆங்கிலம் அறியாத ஆனால், துப்பறியும் கதைகள் படிக்கும் ஆர்வம் மிக்கத் தமிழ் ரசிகர்களுக்கு இந்த நூல்கள் மிகத் திருப்தியை அளிக்கும். தெளிவான மொழிபெயர்ப்பு நூல்களும் தற்போது கிடைக்கிறது.

@ கோகி(நான்):-துப்பறியும் சாம்பு கதைகள் என்றால் எனக்கு மிகவும் பிடித்த கதைகள். அதோடு நான் சிறுவனாக இருந்த எனது பால்ய காலத்து நினைவுகள் மிகவும் இனிமையான நினைவுகள். 

@ சுட்டீஸ் :- துப்பறியும் சாம்பு, ராஜேஷ்குமார், எழுத்தாளர் சுஜாதா போன்றவர்கள் எழுதிய துப்பறியும் கதைகள் படித்திருக்கிறேன்.

@ கோகி(நான்):-மிகவும் புகழ்பெற்ற எனக்கு பிடித்த பழைய காலத்து அப்புசாமியும் சீதாப்பாட்டியும் கதையிலும் துப்பறிய சென்று முடியாமல் சொதப்பி மாட்டிக்கொள்ளும் சுவாரிஷ்யம் ரசிக்கவேண்டிய கதைகள்.

@ சுட்டீஸ்:- "என்னாகுமோ ஏதாகுமோன்னுதான். கொலை கேசு துப்பறிதல்.. திகிலாக இருக்கும்." 

@ நான் ஒரு விவரம் சொல்கிறேன் கேளுங்கள்:-  1957-இல்  அப்போது “திருவாளர் தேவன்” அவர்கள் ஆனந்த  விகடனின் பொறுப்பாசிரியராய் இருந்தார். அவர் "முத்து” என்ற பெயரில் பல அருமையான சிறுவர் கதைகளை எழுதியவர். அப்போது விகடன் உதவி ஆசிரியர்களில் ஒருவரான, “கோபு” கோபாலகிருஷ்ணன்.“ அவர்தான் "தேவன்” அவர்களின் மறைவிற்குப்பிறகு “தேவனின் “துப்பறியும் சாம்பு” படக்கதை வடிவில் 1958 ஏப்ரல் முதல் ஆனந்த விகடனில் பவனி வந்தது.  கோபுலுவின் கைவண்ணத்தில் படக்கதை மின்னியது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. உண்மையைச் சொல்லப் போனால், இன்றைய தலைமுறையில் பலருக்கு “ராஜு” என்ற ஓவியர் தான் முதலில் “சாம்பு” வுக்கு உயிரூட்டியவர் என்றே தெரியாது! அதாவது, ”சாம்பு” அவர்களின்  பதிவுகளையும், ராஜுவின் படங்களையும் பார்க்காதவர்கள்!: “சாம்பு” கதைகள் என்றவுடனே அவர்களுக்குக் “கோபுலு”வின் படங்கள் தான் நினைவுக்கு வரும்!  “சாம்பு”அவர்களின் முதல் துப்பறியும் காமிஸ் கதைப்பாடத்தை பாருங்கள்....

@ கோகி(நான்):-துப்பறிதல்  பற்றி திருக்குறளில் நமது திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். திருக்குறளில் ஒற்றாடல் என்கிற தனி அதிகாரத்தையே தந்திருக்கிறார். 

@ "வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று" (குறள்: 584) என்ற பாடலில் சொல்லப்பட்ட மூவகையினரும் ஒரு நாட்டின் அதிகார வட்டத்தில் இருப்பவர்கள் அல்லது இருந்தவர்கள் ஆவர். அரசு செலுத்துவதில் நேரடியாகத் தொடர்புடையவர்கள் ஆதலால் இவர்கள் செயல்பாடுகளைத் தொடர்ந்து நாடாள்வோன் கண்காணித்து வரவேண்டும் என்கிறார் வள்ளுவர். தமது அரசியல் செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி அரசுக்குத் தீங்கு இழைக்க வாய்ப்பு மிகையாக உள்ளவர்கள் இவர்கள். எனவே ஆட்சியாளர்க்கு மிக நெருக்கத்தில் இருந்தாலும் அவர்களையும் ஒற்று வளையத்தில் கொண்டுவர வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இன்றைய சூழ்நிலைகளுக்கும் இப்பாடல் எத்துணை பொருத்தமாகிறது என்பதைக் காணலாம்...

@கோகி(நான்):- ஆங்கில திரைப்பட உலகின் முக்கிய படமாக இன்று வரை கருதப்படும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் புகழ்பெற்றவை. உளவு, துப்பறிதல் ஆகிய காட்சியமைப்புகள் இப்படங்களில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், இத்திரைப்பட வரிசைகளில் 7 முறை கதாநாயகனாக நடித்த ரோஜர் மூர் (89) சென்ற வருடம் 2017 மே -மாதம் 23ம் தேதியன்று கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு ஸ்விச்சர்லாந்தில் காலமானார்.

@ நான் ஒரு தகவல் சொல்கிறேன் கேளுங்கள்:- சர்வதேச துப்பறிதல் நாவல்களில் மிகப்பிரபலமான "த-டா-வின்சி-கோட்" 2003ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் திரு டான் பிரவுனால் எழுதப்பட்ட மர்மத்-துப்பறிவுப் புனைவு நாவலாகும். இந்த புத்தகம் உலகமெங்கும் 80 மில்லியன் புத்தகங்கள் விற்பனையான சிறப்பு விற்பனைப்புத்தகமாகவும், 44 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதுவும் ஆகும். துப்பறிதல், திகில் மற்றும் முரண்பாட்டு புதின வகைகளை ஒன்றிணைத்து, ராபர்ட் லாங்டன் என்ற கதாப்பாத்திரத்துடன் வெளியிடப்பட்ட கதாசிரியர் பிரவுனின் இரண்டாவது நாவலாகும்.

என்ன சுட்டீஸ் இன்றய பயிற்சி விளையாட்டில் துப்பறிவதைப்பற்றிய சில தகவல்களை தெரிந்துகொண்டோம் அல்லவா? நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் துப்பறியும் விளையாட்டில், "அம்புக்குறி, சிகப்பு கைக்குட்டை" என்கிற ஒரு விளையாட்டை விளையாடப்போகிறோம். அடுத்த பயிற்சி விளையாட்டில் சந்திப்போமா?

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. 

*முன்னோட்டம்:-*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-22*
*(ஐ) துப்பறியும் பயிற்சி விளையாட்டு-2.*

மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-3

பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-3
மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-1

அப்போது நாங்கள் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம் ”மாணவர்களே! நாளை வகுப்புக்கு வரும்போது சிலேட்டும், அதில் எழுத பல்ப குச்சிகளும் வாங்கி வரவேண்டும். வாங்கி வராதவர்கள் வகுப்புக்கு வரத்தேவையில்லை அதிரடி உத்தரவிட்டார் ஆசிரியர் .

”கொல்லென்று சிரிப்பு எழுந்த்து, ஒரு குறும்புக்கார பையன், ”ஸார், ஸ்கூலே முடிக்க போறோம், இப்ப போய் முதல் வகுப்பு பிள்ளை மாதிரி சிலேட்டும், பல்பமும் வாங்கி வரச்சொல்றீங்களே” என்றான்.

ஆங்கில ஆசிரியர் கோபப்படவில்லை. மாறாக, சிலேட் வாங்கி வரச்சொன்னதற்கான காரணம் நீங்களே போக போக புரிந்து கொள்வீர்கள்” என்று முடித்து கொண்டார்.

மறுநாள்… ஆங்கில வகுப்பு…அனைவர் கையிலும் சிலேட்டும். பல்ப குச்சிகளும்… மற்ற வகுப்பு பிள்ளைகள் ஒருமாதிரியாக பார்த்து  கேலியும் செய்தார்கள்.

ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைந்து…”ஆங்கில பாடல் பகுதியை ” கரும்பலகையில் எழுதினார். அதைப் பார்த்து எங்களை எழுத சொன்னார். எழுதிய பின்னர்… சிலேட்டில் உள்ளதை அழித்து விட சொன்னார். இப்படி நான்கு முறை முடித்து ஐந்தாவது முறையில்….கரும்பலகையில் உள்ளதை அழித்து விட்டார்.

இப்போது, எழுதுங்கள் என்றார். என்ன ஆச்சர்யம்…அனைவரும்… புத்தகத்தில் உள்ளதை அச்சு மாறாமல் சிலேட்டில் எழுதி முடித்தனர். ஒரிருவர் தவிர. அனைவருக்கும் மதிப்பெண்களும் சிலேட்டிலேயே வழங்கி ஆச்சர்யப்படுத்தினார்.

ஒருமுறை எழுதுவது பத்து முறை படிப்பதற்குச் சமம் என்று எங்கள் ஆசிரியர் சொல்வார்..புரியாத ஆங்கில பாடலையும் மனப்பாடம் செய்ய இதுவும் ஒரு வழி.

அடுத்தது மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-2ஐ விளையாடுவோமா? நாம் படிக்கும் பாடங்களில் உள்ள விஷயங்களுக்குத் தொடர்புடைய பொருளையோ அல்லது ஒரு ஓவியத்தையோ அல்லது ஏதாவது படலையோ அல்லது எண்களையோ நினைவில் வைத்துக்கொள்வது ஒரு நல்ல முறை. இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

நன்றி திரு.அசோகன் குப்புசாமி  https://kavithaigal0510.blogspot.com/2018/04/blog-post22.html

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

*முன்னோட்டம்:-*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-4*
(ஆ)மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-2

ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள-பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-2


பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-2
ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள:-பயிற்சி விளையாட்டு-01

ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள என்னுடைய தந்தை சொல்லிக் கொடுத்த விளையாட்டுக்களில் வீட்டின் ஒரு அறையில் சில பொருட்களை வைத்துவிட்டு எங்களை அந்த அறையை சுற்றிப்பார்த்துவிட்டு வந்ததும், அந்த அறையினுள்ளே என்ன என்ன பார்த்தீர்கள்? என்று பட்டியலிடச்சொல்லுவார். 

அதேபோல   திரைப்படம் பார்க்க அழைத்துச்செல்லும்போதும் அந்த திரையரங்கில்  எத்தனை மின்விசிறிகள் இருந்தது? அவற்றில் எத்தனை சரியாக இயங்காமல் நின்றுபோயிருந்தது? போன்ற பல கேள்விகளை கேட்ப்பார் அதற்காகவே நாங்கள் போட்டிபோட்டுக்கொண்டு எங்கும், எதைப்பார்த்தாலும்   குறிப்பெடுத்துக்கொள்வோம். 

அவ்வளவு ஏன்.... இன்றைக்கும் நாங்கள் படித்த பள்ளியின் கரும்பலகையில் இருக்கும் ஓட்டை, உடைசல், குழிகளில் ஆசிரியர் வரைந்த படமும், எழுதிய பாடமும் எங்கள் மனதில் நன்றாக பசுமரத்தாணிபோல இன்றளவும் நினைவில் இருக்கிறது என்றால் அன்று எங்களின் தந்தையார் சொல்லித்தந்த பயிற்சி விளையாட்டுக்களே காரணம்.

வாருங்கள் அடுத்த பகுதியில் நாம் பார்க்கவிருப்பது *பாடங்களை மனப்பாடம் செய்வது எப்படி? என்று ஒரு விளையாட்டு சொல்லிக்கொடுத்தார் பிறகு ஒரு பதிவில், சுட்டீஸ் உங்களுக்கு அந்த விளையாட்டையும் விளையாட சொல்லித்தருகிறேன்.*

நாம் ஒரு திரைப்படத்திற்கு செல்கிறோம். அந்த படத்தை ஒரே ஒரு முறைதான் பார்க்கிறோம். அப்படியிருந்தும் அந்த படத்தில் இடம்பெற்ற பாடலை மனப்பாடம் செய்யாமலே நாம்மால் எப்படி பாடமுடிகிறது?வாருங்கள் எனது அடுத்த பகுதியில் நாம் பார்க்கவிருப்பது மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-1 *பாடங்களை மனப்பாடம் செய்வது எப்படி? என்று விளையாடிப் பார்க்கலாம் வாருங்கள். 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. புது தில்லியிலிருந்து.

*முன்னோட்டம்:-*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-3
மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-1

ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-1

பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-1

உண்மைதான் பலவிவரங்கள் பள்ளியில் சொல்லித்தருவதில்லை அந்த விஷயத்தில் (நாங்கள் 6 குழந்தைகள் உடன்பிறந்தவர்கள்) எங்களுடைய தந்தை எங்களுக்கு சொல்லித்தந்த சிறு சிறு பயிற்சி விளையாட்டு இன்றும் எங்களுக்கு மிகவும் பக்கபலமாக திகழ்கிறது. 

பயப்படாமல் இருக்க சிறு பயிற்சி விளையாட்டு.. இரவு காற்றில் வீட்டு சன்னல் கதவு ஆடுவதைக்காட்டி பூதம் வருகிறது என்று சொல்லி அதை எப்படி எதிர்கொள்வது என்பதை எடுத்துக்கூறுவார், ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ளும் சிறு பயிற்சி விளையாட்டை சொல்லித்தந்திருக்கிறார், எளிய வழியில் மனப்பாடம் செய்வது எப்படி என்று சிறு பயிற்சி விளையாட்டில் சொல்லித்தந்திருக்கிறார், கணித பாடங்களுக்கும் முறுக்கு, சீடை, மிட்டாய்களை பயன்படுத்தி கணக்கு பயிற்சி விளையாட்டை சொல்லித்தந்திருக்கிறார், ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளும் பல பயிற்சி விளையாட்டையும் சொல்லிக்கொடுத்தார், தேர்வு எழுதும் பயிச்சி விளையாட்டை விளையாட சொல்லித்தந்திருக்கிறார், அறிவியல், சரித்திரம், பூகோளம் என ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு பயிற்சி விளையாட்டை சொல்லித்தந்திருக்கிறார். 

இப்படி பல கசப்பான பாடங்களையும் விரும்பி படிப்பது எப்படி என்று அதை ஒரு விளையாட்டாக மாற்றி அந்த விளையாட்டை எப்படி விளையாடவேண்டும் என்று சொல்லித்தந்திருக்கிறார். இவை மட்டுமில்லாமல் இசையில் அப்பாவுக்கு அதிக ஆர்வம் புல்புல்தரங்கா என்கிற இசைக்கருவியை வாசித்து பாம்பு மகுடி இசையை அதில் வாசித்துக்காட்டுவார். "எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுதே மற்றும் உன்னை கண்தேடுதே" போன்ற பாடல்களை வாசித்து காட்டுவார். அதோடு அவர் தமது வாயில் விசில் ஊதுவதை போல வாயால் நாதஸ்வரம் வாசித்து காட்டுவார். அவரது நாதஸ்வர கச்சேரியை கேட்பதற்காகவே ஒவ்வொரு கல்யாணம் போன்ற விஷேஷ வைபவங்களில் அவர் கலந்துகொள்ளும்போதெல்லாம் குட்டி கச்சேரி நடத்திவிடுவார்கள்.    

எங்கள் அப்பா "மணி" என்ற ஒரு கற்பனை பாத்திரத்தை உருவாக்கி வைத்திருந்தார். எதற்க்கெடுத்தாலும் மணி என்று பெயர் கூறி ஆரம்பிப்பார்... அந்த அளவில் மணி என்பவன் மிக புத்திசாலியான பையனாக வலம்வந்தான். எங்கள் அப்பாவுக்கு பிடித்த அந்த "மணி" என்பவன்மீது எங்களுக்கு கோபம் கோபமாக வரும் மணி மட்டும் கையில் கிடைத்தால் அடித்து நொறுக்கிவிடுவோம் என்று எங்கள் அப்பா அவரின் கற்பனை பாத்திரமான மணி மீது வைத்திருந்த பாசத்தினால் பொறாமை கொண்டோம். ஆனால் எப்போதும் என் அப்பா மணியைப்பார் ரொம்ப நல்லப்பையன் நீயும் இருக்கிறாயே என மணியை உயர்த்தி எங்களை தாழ்த்தி என்றும் மணியோடு எங்களை ஒப்பிட்டு பேசியதில்லை.  

பல படிப்பினைகளைத்தரும் சிறு சிறு பயிற்சிகளை பல விளையாட்டுக்களாக மாற்றி அந்த விளையாட்டின் வழியே சொல்லித் தந்ததை  இன்றளவும் நானும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். அந்த விளையாட்டுக்கள்தான் பலரும் என்னை விரும்பும் ஒரு உன்னத நிலையை எனக்கு பெற்றுத் தந்தது.  வானொலியில் நான் வழங்கிய நிகழ்ச்சிகளின் வெற்றிக்கும் அவர் காட்டிய வழியே எனக்கும் வழிகாட்டியாக அமைந்த அருமையான விளையாட்டுக்கள் அவை. 

அருமை சுட்டீஸ்கள் அனைவருக்கும்,  எனது தந்தையும் மற்றும் எனது வகுப்பாசிரியரும் எனக்கு சொல்லித்தந்த வாழ்க்கை கல்விக்கு அவசியமான சிறு சிறு பயிற்சி விளையாட்டுக்களைத்தான் நான் இப்போது ஒன்றன் பின் ஒன்றாக உங்களுக்கும் பயிற்சி விளையாட்டாக சொல்லித்தருகிறேன். வாருங்கள் பல்வேறு பயிற்சி விளையாட்டுக்களை விளையாடப்போகலாம். 

(அ)ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள (மறதியை போக்க) பயிற்சி விளையாட்டு.
(ஆ) மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு.
(இ) பயத்தை போக்க பயிற்சி விளையாட்டு. 
(ஈ)கணக்குப் பாடங்களுக்கான (முறுக்கு, சீடை, மிட்டாய்களைக்கொண்டு) பயிற்சி விளையாட்டு.  
(உ) ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளும் பயிற்சி விளையாட்டு. 
(ஊ) தேர்வு எழுதும் பயிச்சி விளையாட்டு. 
(எ) அறிவியல் பயிற்சி விளையாட்டு. 
(ஏ) கசப்பான பாடங்களையும் விரும்பி படிப்பது எப்படி என்ற பயிற்சி விளையாட்டு. 
(ஐ) துப்பறியும் பயிற்சி விளையாட்டு. 
(ஒ) சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி விளையாட்டு.
(ஓ)தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் (ஒரேநேரத்தில் 9வேலைகளை செய்யும்) பயிற்சி விளையாட்டு.
(ஒள) பணத்தின் மதிப்பை தெரிந்துகொள்ளும், விற்று வாங்கும் பயிற்சி விளையாட்டு.
(ஃ)பொது சேவை செய்யும் பயிற்சி விளையாட்டு. 
(அஅ)தியானம் மற்றும் பக்திக்கான பயிற்சி விளையாட்டு.
(அஆ)தோட்டம் அமைக்கும் பயிற்சி விளையாட்டு.
(அஇ)வீட்டு வளர்ப்பு பிராணிகள் பராமரிப்பு பயிற்சி விளையாட்டு.
(அஈ)உடற்பயிற்சி விளையாட்டு. (நீச்சல், மிதிவண்டி, காத்தாடி செய்து பறக்கவிட அப்பா சொல்லித்தந்து)
(அஉ)சமையல் பழகும் ஆராய்ச்சி பயிற்சி விளையாட்டுக்கள். (அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஒவ்வொரு ஞாயிறு விடுமுறையிலும் சமையல் ஆராய்ச்சி??? தக்காளிக்கு பதில் ஆப்பிள் போட்டு ரசம் வைப்பது ஆராய்ச்சி சமையல்).       
(அஊ) வெவ்வேறு மொழிகளை கற்றுக்கொள்ளும் பயிற்சி விளையாட்டு. 

இப்படி இன்னும் பல விளையாட்டுக்கள் மேற்கண்ட தலைப்புகளில் விளையாடியிருக்கிறோம்.. இவ்வளவுதானா? இன்னும் இருக்கிறதா? என்றால்...ஞாபகம் வரும்போதெல்லாம்... மேலும் பல தலைப்புகளில் தொடரும்.

எனது அடுத்த பதிவில், பயிற்சி விளையாட்டில் (அ)ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள:-பயிற்சி விளையாட்டு-01 எப்படி விளையாடுவது என்று விளையாடிப் பார்க்கலாம் வாருங்கள். 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

*முன்னோட்டம்:-*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-

பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-2
ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள:-பயிற்சி விளையாட்டு-01

Wednesday, November 22, 2017

பள்ளிக்கூட நாட்களில் எனது நட்பு வட்டம் பெரியது...பின்னாளில் எந்த நிகழ்ச்சியையும் ஏற்று நடத்திட திடமான மனநிலையைத் தந்தது.

அப்போது நான் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் நேரம்... எனது இஸ்லாமிய (முஸ்லிம்) நண்பர்களான  "ஜமீர்  மற்றும் சலாவுதீன்" இன்று மாலை நாம் தர்காவிற்க்கு (மசூதி) செல்லவேண்டும் அருகே உறவினர் ஒருவரின் திருமண விழாவில் சங்கீத கச்சேரி உள்ளது.... உனக்கு சங்கீதம் பிடிக்கும் என்பதால் என்னுடன் வருகிறாய் என்றான்..... 

பள்ளிக்கூட நாட்களில் எனது நட்பு வட்டம் பெரியது, பல இனத்தவர்களில் நண்பர்கள் இருந்தார்கள். ஐயர் ஆத்து பையனான நான் எனது நண்பர்களுடன் தேவாலயமும் [எனது நண்பர்களில் ஒருவன் "பால் சாமுவேல் மனோகர்" தற்போது திருச்சிக்கருகே ஒரு கிருஸ்துவ தேவாலயத்தில் பாதிரியராக இருக்கிறார்.. மாணவப்பருவத்தில் நாங்கள் அவனை 'பாச மனோ' என்றுதான் அழைப்போம் அவனோடு ஞாயிற்றுக்கிழமைகளில் கிருஸ்துவ தேவாலயம் சென்றுவருவதும் ஒரு விளையாட்டான பிடித்த பொழுதுபோக்குகள்] அதேப்போல எனது இஸ்லாமிய நண்பர்களுடன் தலையில் கைக்குட்டை அணிந்து அவர்களின் தர்க்காவுக்கும் (மசூதிக்கு) சென்றிருக்கிறேன்.  எனது இஸ்லாமிய நண்பனின் வீட்டினர், ஐயர் பையன் என்பதால் அவர்களது வீட்டில் குடிக்கத்தரும் தண்ணீர் டம்ளரையும் இரண்டுமுறை நன்கு கழுவிவிட்டு எனக்கு தண்ணீர் பருகத்தருவார்கள். அத்தனை அன்பை என்னிடம் காட்டியதை என்றும் என்னால் மறக்கமுடியாத நினைவுகள். எனது மற்றொரு நண்பன் பெயர் "மஹாவீர்" ஜெயினமதத்தையும், பஞ்சாட்சரம் என்ற பெயருடைய நண்பன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மலைவாழ் இனத்தைச்சார்ந்தவன் மிக நன்றாக படிப்பவன் முதல் மதிப்பெண் எடுப்பவன் எனக்கு புரியாத கணக்குப் பாடங்களை அவன்தான் சொல்லித்தருவான் ஆறாம் வகுப்பிலிருந்து எனது நண்பன்.....  ஊரின் செல்வந்தரான வஜ்ரவேல் செட்டியார் மகனான சுந்தரவேலும் எனது பிரியமான நண்பன் நாங்கள் ஒவ்வொரு வருடமும் பள்ளி நாடகத்தில் கட்டாயம் சேர்ந்து நடிப்போம்.            

எனது இஸ்லாமிய (முஸ்லிம்) நண்பர்களான  "ஜமீர்  மற்றும் சலாவுதீன்" அன்றய கச்சேரி நிகழ்ச்சி பற்றி வேறு விவரம் ஏதும் சொல்லவில்லை, நண்பன் சொல்லிவிட்டான் என்பதால் என்னுடன் பள்ளியில் படித்த எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் "ஜெயந்தியிடம்" எனது வீட்டில் சொல்லிவிடும்படி கூறி, நண்பனுடன் அந்த சங்கீத கச்சேரிக்கு சென்றோம். கையில் புத்தகப்பைவேறு கனமாக இருந்தது, நிகழ்ச்சி மாலை நான்கு மணியிலிருந்தே தொடங்கிவிட்டது நாங்கள் உள்ளே நுழையும் பொது அந்த பாடல் ஒலித்தத்துக்கொண்டிருந்தது... . "இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுபாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடியதில்ல" நாகூர் E.M.அனிபா அவர்கள் பாடிக்கொண்டிருந்தார்.... இசைக்கருவிகளான புல்புல் தாரங் மற்றும் ஹர்மொனிய இசையும், ஷனாய் ஓசையும் அவரின் குரலோடு சேர்ந்து மனதைக்கவர்ந்தது ....(எல்லோரும் கொண்டாடுவோம், அருள் மேவும் ஆண்டவனே..,தலைவாரிப் பூச்சூடி உன்னை, எத்தனை தொல்லைகள், அதிகாலை நேரம்,காண கண் கோடி வேண்டும் ,தமிழுக்கு அமுதென்று பேர்) என அடுத்த மூன்று மணிநேரம் போனதே தெரியவில்லை. வீட்டிற்கு திரும்பும் பொது எதோ இனம் புரியாத ஒன்று மனதை அழுத்திக்கொண்டிருந்ததைப்போல் உணர்ந்தேன். 

வீட்டில் பெரிய கலாட்டா எனக்காக காத்திருந்தது... என் பள்ளி மாணவியான பக்கத்து வீட்டு ஜெயத்தியின் அம்மா, என் வீட்டாரோடு சண்டை, .... "என் மகள் என்ன உங்கள் வீட்டு வேலைக்காரியா என"???

... இதெல்லாம் உனக்கு தேவைதானா என என் அக்காவும் அம்மாவும் கோபித்துக்கொள்ள, அன்று இரவு அப்பா வீட்டிற்கு வந்ததும் அவரின் பங்கிற்கு அவர் அணிந்திருந்த பேண்ட் பெல்ட்டால் சாட்டையடி வாங்கியதும்...அன்றய அந்த நிகழ்ச்சி மறக்கமுடியாமல் மனதில் நிலைத்து நின்றது...... 

சிறுவயதுமுதலே சங்கீத கச்சேரி, பள்ளிக்கூட  நாடகம், இனம் மொழி என்று எந்த பிரிவினையும் மனதில் தோன்றாமல் அனைத்துமாதத்தினர்களின் கொண்டாட்டங்களில் நிகழ்ச்சியிலும் பங்குகொண்டது பின்னாளில் எந்த நிகழ்ச்சியையும் ஏற்று நடத்திட திடமான மனநிலையைத் தந்தது என்றால் அது சிறு வயதிலிருந்தே மனதில் ஊறிப்போன செயலே.     
வாடாமலர் நினைவுகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.    https://youtu.be/gzMOsaT3Xkw ...

Wednesday, December 28, 2016

நிகழ்சியின் ஐம்பது சதவீத 50% செலவை மிச்சம்பிடிப்பது எப்படி?

பாதியளவு செலவில் நிகழ்ச்சியை நடத்துவது எப்படி அதாவது நிகழ்சியின் ஐம்பது சதவீத 50% செலவை மிச்சம்பிடிப்பது  எப்படி? :-   

ஐம்பது சதவீதம் 50% தள்ளுபடி செலவில் வண்டிச்சத்தம் அதாவது மிச்சப்படுத்தும் வண்டிவாடகை, என்று தளவாடவியலில்(Logistics-லாஜிஸ்டிக்ஸ்)  ஒரு கோட்பாடு  உண்டு.  அதாவது நீண்ட தூரம் பயணிக்கும்,  முழுவதும் நிரம்பிய ஒரு கனரக சரக்கு வாகன சேவைக் கட்டணம் என்பது,  அந்த வாகனம் சென்று சேரவேண்டிய இடத்திற்கு சென்று திரும்புவதற்கான மொத்த அல்லது அதன்  முழுமையான செலவுகளைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது.  இருந்தாலும் சென்று சேரவேண்டிய இடத்தில் சரக்குகளை இறக்கியதும் திரும்ப தனது பழைய இடத்திற்கு திரும்புவதற்கு ஏதும் சரக்கு சவாரி கிடைக்காதபோது, வாகனம் காலியாக திரும்புவதைவிட அந்த வாகனம் திரும்பி வர தேவையான எரிபொருள் செலவையாவது மிச்சப்படுத்தி லாபம் ஈட்டுவதற்கு, வாகன உரிமையாளர் அவரின் வாடிக்கையாளர்களிடம் ஐம்பது சதவீத செலவில் சரக்கு சேவை தருவதற்கு முன்வருவார்.  இந்த ஐமபது சதவீத வண்டிவாடகை செலவில் சரக்குகளை விநியோகிக்க சில நிறுவனங்கள் இந்த சேவைக்காக காத்துக்கிடப்பதும் உண்டு. 

இதைப்போலவே நிகழ்ச்சி தயாரிப்பில் ஒரு உதாரணத்திற்கு,  இந்தியத் தலைநகர் புது தில்லியில் நடைபெறும் பல கலை நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட சில மாதங்களில் நடத்துவது  சிறப்பாக கருதப்படுகிறது, காரணம் சுதந்திரதினம், குடியரசு தினம் போன்ற அரசு சார்ந்த பெரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் நாட்டின் பலப்பகுதியிலிருந்து பல மாநில கிராமியக்  கலைக்குழுக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரசாங்க செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அப்படி வரக்கூடிய கலைக்குழுவினர்களை மிக குறைந்த செலவுகளில், நகரத்தின் அருகாமையில் அமைந்திருக்கும் பல பகுதியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளமுடியும்.  பல கிராமியக் குழுவினர் இலவசமாகக்கூட சில நிகழ்ச்சியில் பங்குகொள்ள முன்வருகிறார்கள். அப்படி முன்வருபவர்களையும் பல நிகழ்ச்சியில் பயன்படுத்திக்கொண்டு அவர்களை பாராட்டி பல பரிசுகள் வழங்கியிருக்கிறோம். 

@ ஒரு திருமண நிகழ்ச்சியில் "கிராமிய பாடல் கச்சேரி" "கரகாட்டம்",  "பரத நாட்டியம்",  "வாத்தியக்குழுவினர்களின் கச்சேரி"  


@  கோவிலில் திருவிழா நிகழ்ச்சியில், திறப்புவிழா நிகழ்ச்சியில், பிறந்தநாள் மற்றும் மணநாள் நிகழ்ச்சியில், பொருட்காட்சி, சிறப்புக் கூட்டங்கள், கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கிராமிய கலைக்குழுக்கள் பங்குபெறும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 

@ நாட்டுபுற பாடல்கள், வில்லுப்பாட்டு, பறையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகம், காவடி, தெருக்கூத்து, நாடகம், சிலம்பம், குத்து, தப்பு, புலியாட்டம் போன்ற நம்முடைய பாரம்பரிய கிராமியக்கலை, கிராமிய விளையாட்டுகளையும்  பாடல்களையும் அருகிருந்து பார்க்கவும், பாதுகாக்கவும் நாம்தான் முயற்சிக்க வேண்டும். ஆகவே இசையோடும் பழம்பெரும் கலைகளோடும் இணைந்து இன்புற்றிருக்க உங்களுக்கு தோன்றினால் நமது வாழ்வில் நடக்கும்  அனைத்து நிகழ்ச்சியிலும் நாட்டுப்புற கலைகளுக்கு வாய்ப்பை வழங்க நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம் என்கின்ற எண்ணங்களையாவது நமது மனதில் நிலை நிறுத்துவோம். 

ஆகவே எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்த நினைக்கும்போதே இப்படிப்பட்ட பல விவரங்களில் நாம் கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம்.  

சிங்கை என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் மற்றும் மலேசிய, மொரிசியஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் பல உல்லாச விடுதிகளில் நடக்கும் நிகழ்ச்சியில் கட்டுப்படுத்தப்பட்ட, குறைந்த  செலவுகளில், செலவுகளை மிச்சயப்படுத்தும் நோக்கில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் நான் நேரடியாக கலந்துகொண்டிருக்கிறேன். பல கலைக்குழுவினர்கள் மற்றும் இசைக்குழுவினர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தி விளம்பர படுத்துவதற்காகவும், உல்லாச விடுதி நிகழ்சியில் பங்குகொள்ள முன்வருகிறார்கள்.   அவர்களின் நோக்கம் நிகழ்ச்சிக்கு வரும் உல்லாச விடுதி விருந்தினர்களை கவர்ந்து அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வாய்ப்பினைப் பெற்று மேலும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருமானம்  சேர்க்கவேண்டும் என்கிற எண்ணத்தில் போட்டி போட்டுக்கொண்டு, விளம்பரத்திற்காக இலவசமாகவே உல்லாச விடுதி நிகழ்சியில் பங்குகொள்ள முன்வருகிறார்கள்.  

ஆகவே சிலவுகளை மிச்சப்படுத்தி ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்ப்பது என்பது,  நிகழ்ச்சி தயாரிப்பின் மிக முக்கிய நோக்கமாகவே கருதப்படுகிறது.  இனி நீங்கள் உங்களின் சொந்த நிகழ்சிகளை நடத்த திட்டமிடும்போது,  நிகழ்ச்சிக்கான செலவுகளை பாதியாக குறைப்பது எப்படி என சிந்தித்து அதற்க்கேற்றாற்போல நிகழ்ச்சியை நடத்த, உங்களது அனுபவம்.... உங்களுக்கு சிறந்த வழிகளைக் கற்றுத்தரும். அல்லது நிகழ்ச்சி தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த ஒருவரை பக்கபலமாக வைத்துக்கொண்டு நிகழ்ச்சியை நடத்த திட்டமிடுங்கள்.  

வாய்ப்புகள்  எங்கும் கொட்டிக்கிடக்கிறது..... வாய்ப்புக்களை உருவாக்கவோ அல்லது இருக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ளவோ ....அப்படிப்பட்ட வாய்ப்புக்களை எப்படி தேடி கண்டுபிடித்து, மிகச் சரியாக  பயன்படுத்திக்கொள்வது என்பதுதான் மிக முக்கிய சவாலாக நம் முன்னே நிற்கும் கேள்வி? 

குறைந்த சிலவிலோ அல்லது இலவசமாகவோ ஒரு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தவேண்டுமா? கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது எப்படி என்கிற நிகழ்ச்சிகளின் அனுபவ நுணுக்கங்களை, நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை பக்கங்களின்வழியே பல அனுபவம் பெற்றவர்களின்  பதிவுகளிலிருந்து  உங்களுக்கு பயன் கிடைக்கும் என நம்புகிறோம். நன்றி. 

Tuesday, December 27, 2016

"தாத்தா பாட்டிகள் உள்ள வீடு-முன்பெல்லாம் கிராமங்களில் இரவு ஒன்பதுமணியானால் போதும் ....

கதை சொல்வது என்பது நம் தமிழ் கலாச்சாரத்துடன் ஒன்றிய ஒரு வழக்கம். இது காலங்காலமாக நம் பண்பாட்டுடன் கலந்து, வளர்ந்துவரும் ஒன்று. .."தாத்தா பாட்டிகள் உள்ள வீடு" ஆயிரக்கணக்கான புத்தகங்களை கொண்ட நூலகத்திற்கு சமம் !" 

முன்பெல்லாம் கிராமங்களில் இரவு ஒன்பதுமணியானால் போதும் வீட்டுக்கு வெளியே இருக்கும் ஆலோடி எனப்படும் வராண்டாவில் பாட்டி அமர அவளைச் சுற்றி அவள் மடியில் தலைவைத்து சுவாரஸ்யமாக கதைகள் கேட்பது வழக்கம். அவளும் கருத்துச் செறிந்த, வீரமிக்க இதிகாச, புராண, சமூகக் கதைகள் சொல்வாள். அவைகளைக் கேட்டு குழந்தைகளாகிய நம் மனதில் நல்ல பண்பு, பழக்க வழக்கங்கள், வீரம் வளர்வதுமுண்டு. 
இதன் அடிப்படையில் நம் முன்னோர்களும் பஞ்சதந்திரக் கதைகளென்று நீதி மேம்படவும், விக்ரமாதித்தன் கதைகளென்று நம் புத்தியைத் தீட்டக்கூடிய பலவற்றை எழுதி நமக்களித்துள்ளனர்.

வேனிற்காலங்களில் பெரும்பாலும் நதிகள் வற்றிவிடும். அந்த ஆற்று மணலில் தெருக்கூத்து என்று பல சரித்திரக் கதைகளை நடித்துக் காட்டிச் சொல்வதுமுண்டு. கேரளத்தில் சாக்கியார் கூத்து என்று கதைசொல்லும் பழக்கமும் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இது தவிர கோயில்களில் திருவிழாக் காலங்களில் கதாகாலட்சேபம் என்ற நிகழ்ச்சி நடைபெறுவது இன்றும் வழக்கிலுள்ளது. பொம்மலாட்டங்கள் மூலமாகவும் அக்காலத்தில் பல தெய்வீகக் கதைகளும் சொல்லப் பட்டு வந்தது.
இவையாவும் காலப் போக்கில் வளரும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கதை சொல்லும் இக் கலையை செப்பனிட்டு இப்போதெல்லாம் திரைப்படங்கள் வாயிலாக பல கதைகள் சொல்லப்பட்டு வருவதை நாம் நன்கறிவோம். 
தற்சமையம இந்திரா காந்தி தேசிய கலை மையம் வழங்கும் சர்வதேச கதைசொல்லும் விழா நடைபெறுவதுகேட்டு காலங்காலமாக கதைகளைச் சுவைத்துவந்த எனக்கு மிக்க மகிழ்ச்சியாயிருக்கிறது. இந்தக் கதைசொல்லும் கலை மென்மேலும் பலர் பங்கு பெற்று ஊக்குவிக்கப்பட்டு விரிவடைந்து வளர வேண்டும் என்பதே என் அவா!
நன்றி... 
Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.