நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : August 2015

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Saturday, August 22, 2015

ஒரு புதிய தொழிலை தொடங்குவதற்கு முன்பு,

திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும் பகுதியில், ஒரு புதிய தொழிலை தொடங்குவதற்கு முன்பு, தொழில் தொடங்குவதர்க்குத்தேவையான திட்டமிடுதலையும், அதைச்சார்ந்த விவரங்களை தெரிந்துகொள்ளுதல் மிக மிக முக்கியம். முதலில் எது நமக்கான தொழில் என்று தீர ஆராய்ந்து முடிவெடுத்த பிறகு கீழ்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உங்களுடையது முதல் தொழில் முயற்சி என்றால், உங்களுக்கு ஏற்ற முதலீட்டை மட்டும் போட்டு ஆரம்பியுங்கள். அகலக்கால் நினைப்பு வேண்டாம். மேலும், உங்கள் முயற்சி தனி முயற்சியாக இருப்பது உத்தமம். உறவினருடனோ, நண்பருடனோ சேர்ந்து தொழிலில் ஈடுபடுவதாக இருந்தால், உங்களைப் போலவே அவர்களும் உண்மையான, நேர்மையான வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் உள்ளவர்களாக இருத்தல் மிக அவசியம். அப்படி இல்லாவிட்டால் ஆரம்பக் கட்டத்திலேயே மன வருத்தம் உண்டாகிவிடும். இதனால் செய்யும் தொழில் பாதிக்கும். லாபமோ, நஷ்டமோ உங்கள் தனித்திறமைகளை முன்வைத்துத் தொடங்கும் போது, உங்களுடைய குறைகளை நீங்களே அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

குறுந்தொழிலோ, சிறு தொழிலோ செய்பவர் தன்னை ஓர் உழவருடன் ஒப்பிட்டுக் கொள்ளவேண்டும். நிலம், நீர் அனைத்தும் இருந்தாலும் சிறந்த அறுவடையை மனத்தில் இருத்திக்கொண்டு ஒரு உழவர் கடுமையாக உழைக்கிறார். அதைப் போல் தொழில் முனைவோர் தனது செயல்திறனைப் பயன்படுத்தி இலக்கைக் குறிவைத்து உழைக்க வேண்டும். ஒருவரது உழைப்பைப் பொறுத்தே அறுவடை எத்தனை ஆண்டுகளுக்குக் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்படுகிறது.

சிலர், லாபம் கிடைத்தவுடன் உடனே செலவு செய்யவும் ஆரம்பித்து விடுவார்கள். கல்லாவில் சில்லறை சேர்ந்தவுடன் ஒரு ஓட்டல் முதலாளி அதனை எடுத்துக் கொண்டு காணாமல் போனால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்டதுதான் இதுவும். இடத்துக்கான வாடகை, மின்சாரக் கட்டணம், போக்குவரத்துச் செலவு, சப்ளையர்களுக்குத் தரவேண்டிய பாக்கி, வங்கிக் கடன் போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, மிச்சமிருப்பதை சேமிப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். மிகச் சிறு பகுதி மட்டுமே செலவுகளுக்கு.

நீங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருந்தால் குறைந்த முதலீடு உள்ள தொழில்களைத் தேர்வு செய்வது மிக அவசியம். ஆனால், எந்தச் சிறு தொழிலும், எளிமையாக இருந்தாலும், திறமையாக அதை நடத்திச் செல்லும்போது, அது வளர்ச்சி அடைவதைத் தவிர்க்கவே முடியாது. சிறு அலுவலகமாக இருந்தாலும், அதை ஒரு அழகான இடமாக மாற்றி, தங்கள் தொழிலை, பொருளை, தங்களை, இந்தச் சமூகத்தின் முன்பு அடையாளம் காட்ட வேண்டியது மிக அவசியம். வாடிக்கையாளர்களை தொழிலதிபர் நேரிடையாகச் சந்திப்பதும் தொடர்புகளை விரிவுபடுத்துவதும் இந்தச் சூழலில் மிக அவசியம். எந்தத் தொழிலிலும், தரமான பொருள் அல்லது சேவை இருக்கும் பட்சத்தில், வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகுவது இயல்பானது.
பிரமிக்க வைக்கும் அளவுக்கு பணம் ஈட்டியவர்களையும் நம்பமுடியாத அளவுக்கு அவற்றைத் தொலைத்தவர்களையும் நான் கண்டிருக்கிறேன். செல்வம் என்பது கையை விட்டு செல்லக் கூடிய ஒரு கருவி. தக்க வைத்துக் கொள்ளும் சூத்திரம் அறியாதவர் எவ்வளவு ஈட்டினாலும் பிரயோஜனம் இல்லை. சிறு லாபம் வந்தவுடன் நிலை தடுமாறி வாழ்க்கைத் தரத்தை மிக அதிகமாக உயர்த்திக் கொள்ளும் பெரும்பாலோரை நான் கண்டிருக்கிறேன். தொழிலிலிருந்து வரும் நிகர லாபத்தின் ஒரு பகுதி அந்தத் தொழிலை மேம்படுத்துவதற்குச் செலவு செய்ய வேண்டியது அவசியம். தொலைநோக்கு மிக அவசியம்.

நாற்பது வயதுக்குமேற்பட்ட பலரும் பொதுவாக இவ்வாறு கூறுவதுண்டு. ‘நான் கூட சிறிது காலம் தொழிலில் ஈடுபட்டேன். ஆனால் எதிர்பாராத முன்னேற்றம் இல்லாததால், அத்தோடு விட்டுவிட்டேன்.’ எந்தவொரு தொழிலையும் நின்று, நிதானித்து, நிலைத்து நிற்கும்படி தொடர்ந்து நடத்துவதில்தான் திறமை அடங்கியுள்ளது. சிறிது காலம் அதைச் செய்தேன், சிறிது காலம் இதைச் செய்தேன் என்று சொல்பவர்கள் தொழிலைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல், ஒரு மேம்போக்கான உந்துதலில் தொடங்கி இருப்பவர்களாக இருக்கவேண்டும். இல்லையேல் தொழில் ஆர்வத்திலிருந்து அவ்வளவு சீக்கிரம் பின்வாங்கிட முடியாது.

உலகளாவிய அளவில் நிர்வாகவியல் குறித்து ஆய்வுகள் நடத்தியிருப்பவர்கள் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் இது. ஒரு தொழிலின் வீழ்ச்சிக்குக் காரணம் அந்தத் தொழிலை நடத்துபவர்தானே தவிர, அந்தத் தொழிலால் ஏற்படும் இடர்பாடுகள் அல்ல. முன்பெல்லாம் பிசினஸில் இறங்கவேண்டுமானால் ஒருவருக்கு தொழில்நுட்ப அறிவு (Technical expertise) மட்டும் போதும் என்று சொல்வார்கள். ஆனால் இன்றோ நேர்மையான எண்ணம், நிர்வாகத் திறமை, பிரச்னைகளைக் கையாளும் விதம், கடுமையான உழைப்பு, சமூக அக்கறை ஆகிய அனைத்தும் தேவைப்படுகின்றன.

இதைப் படிக்கும்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். வண்ணமயமான விளம்பரங்கள், பகட்டு வார்த்தைகள், ஆடம்பரமான மக்களைக் கவரும் உத்திகள் போன்றவற்றைச் செய்துதானே பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலை நடத்திக் கொண்டிருக்கின்றன? சற்று முன் பார்த்த அம்சங்கள் எங்கே இருக்கின்றன? என்றால், என் பதில் இதுதான். உண்மை, உழைப்பு, உறுதி ஆகியவை நம் வசம் இருந்தால் நம் முயற்சி முழு வலிமையுடன் நிச்சயம் வெற்றியடையும். மற்றபடி, பொய்மையும் போலித்தனமும் நிச்சயம் ஒருநாள் நம்மைக் கீழே இழுத்துவிடும்.

இன்று மக்கள் வேகமாக முடிவெடுத்து ஒரு பொருளையோ ஒரு நிறுவனத்தையோ நம்பிவிடுகிறார்கள். அதே போல், மிக எளிதாக தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டும் விடுகிறார்கள். உண்மைத்தன்மை இல்லாவிட்டால் எந்தவொரு நிறுவனத்தாலும் தாக்குப்பிடிக்கமுடியாது. அதனால் தரமான பொருளையோ, சேவையையோ மக்களுக்கு அளிப்பது ஒவ்வொரு தொழிலிலும் ஈடுபடுவோரது கடமையாகும்.

ஒரு தொழிலில் ஈடுபடுபவரின் பிரச்னையும் மன உளைச்சலும் அந்த அனுபவத்தைப் பெற்றவர்களால் மட்டுமே உணரமுடியும். பொதுவாக நமது சமுதாயத்தில் பிசினஸ் செய்பவர்களைப் பார்த்துப் பெருமூச்சு விடுபவர்களே அதிகம். அவர்களுக்கென்ன பிசினஸில் பணம் அள்ளி எடுக்கிறார்கள் என்றுதான் அவர்கள் சொல்வார்கள். அவர்களுடைய ஏக்கங்களை ஒதுக்கிவைத்துவிட்டு தொழிலில் முழுக்கவனத்தைக் குவிக்கவேண்டியது அவசியம்.

தொழில் முனைபவர் வாடிக்கையாளரின் பிரச்சனைக்கு உடனடித் தீர்வுகளை யோசிக்கும் திறன்படைத்தவர்களாக இருப்பது அவசியம். இந்த இடத்தில் தொழில் முனைவோரின் சில தனிமனித இயல்புகள், தன்னிச்சையாக வெளிப்பட வாய்ப்பு உள்ளது. அது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. உதாரணமாக ஒருவர் வீட்டிலோ அல்லது தான் வாழும் சூழலிலோ, கோபப்படுபவராக இருந்திருக்கலாம். பிறரின் ஏளனமான சொற்களையோ கடுமையான விமரிசனங்களையோ பொறுத்துக் கொள்ள முடியாத இயல்புடையவராக இருந்திருக்கலாம். ஆனால் தொழிலென்று வந்த பிறகு வாடிக்கையாளரின் விமரிசனத்தை மனத்தில் கொள்ளாமல் செயல்படவேண்டும்.

வாடிக்கையாளர் சில நேரம் எரிந்து விழலாம். பாராமுகத்தோடு சொற்களைப் பேசலாம். கடுமையான வார்த்தைகளுடைய கடிதத்தை அனுப்பலாம். இவை யாவும் தனி மனித மரியாதையை அவமதிப்பதாக எடுத்துக்கொண்டு செயல்படுவது வியாபாரத்தில் தவறு. நிதானமும் பொறுமையும், குறிப்பிட்ட நேரத்தில் முடிவெடுக்கும் திறனும், எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளும் சாமர்த்தியமும், ஒரு பிரச்னைக்கு பல தீர்வுகளை யோசனை செய்வதும் மிக அவசியம்.

தகுதியான நபர்கள் இல்லாமல் எந்தவொரு தொழிலையும் நடத்தமுடியாது. உங்கள் உறவினருக்கோ நண்பருக்கோ உங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்புத் தருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நபர் அவருக்குரிய வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தாத பட்சத்தில் அவரை வெளியேற்றுவதில் எந்தவித தயக்கமோ, உணர்வுப் பிரச்னையோ எழக்கூடாது. பரவாயில்லை, பொறுக்கலாம் என்று தவறுகளைப் பொறுத்துக்கொள்ளத் தொடங்கினால் அதுவே அந்தத் தொழிலின் வீழ்ச்சிக்குப் பெரும் காரணமாக அமைந்துவிடும். பெரும்பாலான சிறு தொழிலதிபர்கள் ஒரு சில தொழிலாளர்களை அளவுக்கு அதிகமாக நம்பி விடுவார்கள்.

எந்தவொரு தொழிலையும் தொடங்குவதற்கு முன்பு அதை நீங்கள் தனி நபராகச் செய்யப்போகிறீர்களா அல்லது கூட்டுத் தொழிலாகச் செய்யப்போகிறீர்களா என்பதைப் பற்றித் தீர்மானமான, தீர்க்கமான முடிவை எடுப்பது மிக அவசியம். தனிப்பட்ட நட்பு வேறு, தொழில்முறை உறவு வேறு. இதைப் புரிந்துகொள்ள தவறினால் மன உளைச்சல் பெருகும்.

உடன் இருப்பவர் உழைப்பாளியா அல்லது சுகவாசியா, நேர்மையானவரா அல்லது போலியா, லாபத்தில் மட்டும் பங்கேற்பவரா அல்லது நஷ்டங்களிலும் உடன் இருப்பவரா, பிரச்னைகளைத் துணிவுடன் எதிர்கொள்பவரா அல்லது ஓடிவிடுபவரா போன்றவற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும். உங்கள்மீது அக்கறையும் அன்பும் கொண்டவராக அவர் இருப்பது நல்லது.

கவனம், ஒரு தொழிலைத் தொடங்குவதில் மட்டுமல்ல, இழுத்து மூடுவதிலும்கூட சட்டச் சிக்கல்கள் உள்ளன. தொடரவும் முடியாமல் மூடவும் முடியாமல் திரிசங்கு சொர்க்கத்தில் அகப்பட்டு செய்வதறியாது நிற்கும் நிலையைத் தடுக்கவேண்டும். ஒருவர் தங்களுடைய சொந்த லாப, நஷ்ட பிரச்னைகளால் சுய தொழிலிலிருந்து விலகினால், பலர் வேலையிழந்த தடுமாறுவார்கள் அல்லவா?

சிறு தொழில் ஒன்றை மேற்கொள்பவரை வட்டத்துக்குள் இருக்கும் ஒரு புள்ளியோடு ஒப்பிடலாம். முதலில் அவரால் ஒரு சிறு குழுவுக்கு (team of employees) வேலை வாய்ப்பு கிடைத்து பலன் பெறுகிறார்கள்.

அடுத்து, அவருடைய தொழிலுக்குத் தேவையான கருவிகளையோ உபரிப் பொருளையோ மூலப் பொருள்களையோ வழங்குபவர்கள் (suppliers) பலன் பெறுகிறார்கள். அவர்களுடைய வியாபாரம் வளர்ச்சி அடைகிறது. அடுத்த கட்டமாக, தொழில் செய்பவர் தான் உற்பத்தி செய்யும் பொருளையோ (finished products) அல்லது சேவையையோ (services) சமுதாயத்தின் முன் வைக்கின்றனர். பிறகு, அவற்றை நுகரும் வாடிக்கையாளர்கள் (customers) உருவாகிறார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொழில் உருவாவதால், அந்த இடத்தைச் சுற்றி பல சிறிய பெரிய அனுகூலங்கள் உருவாகின்றன.

உதாரணமாக, சிறு தொழில் நடத்தும் இடத்துக்கு அடிக்கடி பொருள்கள் வந்து போக வேண்டிய நிலை இருந்தால், அந்தத் தொழிலதிபர் சாலைப் பிரச்னையைத் தீர்க்க வேண்டியவராக மாறிவிடுகிறார். தனது சுயலாபத்துக்காகவும் தொழில் முன்னேற்றத்துக் காகவும்தான் அவர் அவ்வாறு செய்கிறார் என்றாலும் அவருடைய சுயநலன் பொது நலத்துக்கும் உகந்ததாக மாறிவிடுகிறது. அதே போல் அவர் செலுத்தும் வணிக வரி, வருமான வரி போன்றவை மூலம் அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் வருமானம் பெருகுகிறது. நல்லப் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுகிறது. தகவல் நன்றிகளுடன் திருவாளர் மைதிலி "பெண்மை.காம்"

உங்களிடம் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் இருந்தாலே போதும், நீங்களும் ஒரு முதலீட்டாளராக ஆகமுடியும்.

உங்களிடம் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் இருந்தாலே போதும், நீங்களும் ஒரு முதலீட்டாளராக ஆகமுடியும். வருகிற ஜூலை-2015, 11 மற்றும் 12 ம் திகதி அன்று தமிழகத்தின் கோயம்புத்தூர் நகரில் அமைந்த சுகுணா கல்யாண மண்டபத்தில், சென்னையை சேர்ந்த குழு மற்றும் வர்த்தக கண்காட்சிகள் நிறுவனத்தின் "கோவை -முதலீடு எக்ஸ்போ -15" (Invest Xpo'15, a national-level exhibition and seminar on investment and business opportunities) என்கிற முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்பிற்கான, தேசிய அளவிலான வர்த்தக கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 2 நாட்கள் நடக்கும் கோவை முதலீட்டு கண்காட்சியில் சுமார் 40 அரங்குக் கூடங்கள் அமைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியை ஏற்று நடத்தும் குழு மற்றும் வர்த்தக கண்காட்சிகள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பிரதம நிறைவேற்று தலைவரான திரு வி,ஜே. கோபாலன் (Mr. V.J.Gopalan, Chairman and Chief Executive) அவர்கள் குறிப்பிடுகையில், இதேபோன்ற ஒரு கண்காட்சியை பொள்ளாச்சியில் நடத்தியபோது மிகப்பெரிய வரவேற்ப்பையும், அனைவருக்கும் சந்தையில் முதலீடு செய்வது பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியதொடு அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் வர்த்தக கண்காட்சி அமைந்திருந்ததால், பலர் முதலீடு செய்ய ஆர்வத்தோடு முன்வந்ததை போலவே கோவையிலும் அமையும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்,

மேலும் முதலீட்டாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும்விதமாக, மாநிலத்தின் நிலை-II மற்றும் நிலை-III நகரங்களில் இது போன்ற முதல்லீட்டாளர் கண்காட்சிகளை நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

செபி-SEBI மற்றும் தேசிய பங்குச் சந்தை-NSC (National Stock Exchange) மற்றும் பல் பொருள் பரிவர்த்தனை மையம்-MCX(Multi Commodity Exchange) போன்ற பங்குச் சந்தை நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பங்குச்சந்தை வல்லுனர்கள் என பலர், கண்காட்சிக்கு வருகைதரும் முதலீட்டாளர்களுக்கு, சந்தை முதலீடுகள் சார்ந்த கல்வி புகட்டுவது மற்றும் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து இலாபம் சம்பாதிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி, கோவையின் அனைத்து முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில் இந்தக்கண்காட்சி அமையும் என்று நிகழ்ச்சியை ஏற்று நடத்தும் குழு மற்றும் வர்த்தக கண்காட்சிகள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பிரதம நிறைவேற்று தலைவரான திரு வி,ஜே. கோபாலன் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார். http://www.investexpo.in/who-we-are.php

திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும்

திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும் பெரிய அளவில் ஒரு சர்வதேச கண்காட்சிக்கான திட்டமிடுதல் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பு, மேலும் அந்த நிகழ்ச்சியை பொறுப்பேற்று நடத்துவதர்க்கான எளிய வழிமுறைகள் பற்றிய குறிப்புகளோடு, சுவையான பல அனுபவங்களையும் தெரிந்துகொள்ள எனது "முகநூளின்- நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பட்டறைக்கு" வருகை தாருங்கள் "www.facebook.com/Programmedirectors"

“உனக்கு என்ன புத்தகம் வேண்டுமானாலும் சொல்லு.. பழைய புத்தகக் கடையில் வாங்கித் தருகிறேன்”

பழைய நினைவுகளில் சென்னை புத்தகக் கண்காட்சி :-அனைத்து அரங்குகளிலும் மக்கள் கூட்டம். .......
எதை வாங்கலாம் என்று அலைபாயும் கண்கள்.

“கண்ணா.. உனக்கு என்ன புத்தகம் வேணும்ன்னு பார்” என்று ஒரு குரல்.

சுற்றிலும் ஆண் பெண் குழந்தைகள் பலரும் தாங்கள் விரும்பிய புத்தகங்களையும், தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான புத்தகங்களையும் தேடி அலைந்து வாங்கிக் கொண்டு இருந்தனர்.

அதற்கிடையில், “உனக்கு என்ன புத்தகம் வேண்டுமானாலும் சொல்லு.. பழைய புத்தகக் கடையில் வாங்கித் தருகிறேன்” என்ற குரலும்.
இதைக் கேட்டதும், “ என்னடா இது.. இந்த இடத்தில் இப்படியா?” பழைய புத்தகமா? இங்கே எங்கே பழமைவாய்ந்த அந்த மூர் மார்கெட் வந்தது, என்று எண்ணத் தோன்றியது. இதற்க்கான விடையை கண்காட்சியின் இறுதியில் தெரிந்துகொண்டேன்.

கண்காட்சியைச் சுற்றிப் பார்த்து வேண்டியதை வாங்கி முடித்ததும், கிளம்பினோம். ஆட்டோவில் கிளம்பி யூ வளைவில் திரும்பிதும், கண்காட்சிக்கு நேர் எதிர் சாலையில் ஏகப்பட்ட கூட்டம். என்ன விற்கிறார்கள் என்று ஆர்வத்துடன் எட்டிப் பார்த்து போது, ஆச்சரியமாக இருந்தது. மக்கள் புத்தகங்களை பிரித்து பார்த்துக் கொண்டும் வாங்கிக் கொண்டும் இருந்தனர். கண்காட்சியில் பங்கு கொள்ள முடியாத கடைக்காரர்களா என்று பார்த்தால் அது தான் இல்லை. பழைய புத்தகங்களை அங்கே குவித்திருந்தனர். கடைக்காரர்கள் பலரும் இந்த பன்னிரண்டு நாட்களில் நன்றாகச் சம்பாதிக்கும் வாய்ப்பினைத் தவற விடக்கூடாது என்று தங்களிடம் இருப்பில் இருந்த பழைய புத்தகங்களையெல்லாம் கொண்டு வந்து கடை விரித்திருந்தார்கள். அங்கும் மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. நான் ஆரம்பத்தில் கேட்ட “உனக்கு என்ன புத்தகம் வேண்டுமானாலும் சொல்லு.. பழைய புத்தகக் கடையில் வாங்கித் தருகிறேன்” என்ற குரலில் எந்தவிதத் தவறும் இருந்ததாக அப்போது எனக்குத் தோன்றியது.

கண்காட்சியின் நிகழ்ச்சி நிரலில், ஓவியப் போட்டியும் பேச்சுப்போட்டியும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டதைக் கண்டேன். இந்தப் போட்டிகளின் நடுவே, வாசகர் போட்டியையும் இணைத்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஒரு எழுத்தாளரின் புத்தகத்திலிருந்து சில அறிய, பெரிய, மறக்கமுடியாத, வாழ்க்கைக்கு உபயோகமான வரங்களைப்பற்றி பேசுவது மற்றும் எழுத்தாளர்களின் புதிய புத்தகம் ஒன்றைப் படித்து அதன் விமர்சனத்தைத் தருவதோ கூட சுவையானதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

இந்திய தேசியக் கொடி தலைகீழாகப் பறந்த சம்பவம்

பத்திரிகை செய்தி (Wednesday, June 24, 2015), தினமணி,- ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டத்தில் நடைபெற்ற ராணுவ விழா ஒன்றில், இந்திய தேசியக் கொடி தலைகீழாகப் பறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதை யாரும் கவனிக்காத நிலையில், நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட குரூப் போட்டோவில்தான் இந்த விஷயமே தெரிய வந்துள்ளது.
..விளைவு அந்த விழா ஏற்பாடு செய்த இராணுவ அதிகாரியிடம் விளக்கம் கேட்டு விசாரணை செய்யுமாறு இந்திய ஜனாதிபதி அலுவலகம் காஷ்மீர் மாநில தலைமைச்செயலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆகவே ஒரு அரசு விழாவின் நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும் திறம்பட அந்த நிகழ்ச்சியை நடத்துவது என்பது அவ்வளவு எளிய வேலை இல்லை அதற்க்கென்று தனி அனுபவ அறிவு அவசியம் தேவை.

நிகழ்ச்சி தயாரிப்பாளரின் "கூறியது கூறல் என்பது

நிகழ்ச்சி தயாரிப்பாளரின் "கூறியது கூறல் என்பது வானொலிக்கு மட்டுமின்றி தொலைக்காட்சிக்கும் பொருந்தும்" குண்டு வெடித்தது என்பது "குண்டி" என்று தவறாக வெடித்துவிட்டது .......

நிகழ்ச்சி மேலாண்மையில் ஜொலிக்கலாம்!

நிகழ்ச்சி மேலாண்மையில் ஜொலிக்கலாம்!
பெண்களிடம் இயல்பிலேயே நிர்வகிக்கும் திறனும், ஒருங்கிணைக்கும் திறனும் அதிகமாக இருக்கும். அந்தத் திறனைச் சரியாகச் செயல்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொண்டால் வீட்டில் இருந்தபடியே நிகழ்ச்சி மேலாண்மை(Event Management) துறையில் சாதிக்கலாம் என்கிறார் ‘ஸ்வதேஷ் ஈவன்ட்ஸ்’ நிர்வாகி ஷியாமளா ரமேஷ்பாபு. இவர் இரண்டு ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி மேலாண்மை துறையில் இயங்கிவருகிறார்.

அடிப்படையில் பள்ளி ஆசிரியரான ஷியாமளா, இந்தத் துறையில் நுழைந்தது முற்றிலும் எதிர்பாராத ஒன்று. “என் அம்மாவின் சிகிச்கைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு மாதம் அவருடன் தங்கியிருந்தேன். அப்போது நான் தனியார் பள்ளியில் ஆசிரியர் பயிற்சியாளராக இருந்தேன். மருத்துவமனையில் இருந்தபடியே என் பள்ளி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தேன்.

என் அம்மாவுக்கு சிகிச்சையளித்த டாக்டர் டி.ஜி. பாலச்சந்தர் என் ஒருங்கிணைப்புப் பணியைப் பார்த்துவிட்டு என்னிடம் ஒரு மருத்துவ மாநாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். அதை நான் வெற்றிகரமாகச் செய்துமுடித்த பிறகுதான், நிகழ்ச்சி மேலாண்மையில் எனக்கு இருக்கும் திறமையை நான் உணர்ந்தேன்” என்கிறார் ஷியாமளா.

சவாலை சமாளிக்கலாம்

அதற்குப் பிறகு மருத்துவ மாநாடுகள், பெருநிறுவன நிகழ்ச்சிகளை வீட்டில் இருந்தபடியே நிர்வகித்துவருகிறார் இவர். நிகழ்ச்சி மேலாண்மை என்பது சவால்கள் நிறைந்தது. சவால்களை விரும்பும் பெண்களுக்கு இந்தத்துறை பொருத்தமானதாக இருக்கும் என்று சொல்கிறார் இவர்.

“இந்தத் துறையில், 24 மணிநேரமும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். நிறைய தொடர்புகளை உருவாக்குவது, எதிர்மறை விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம், வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பொறுமையுடன் பதிலளிப்பது, அவர்களது தேவைகளை முடியாது எனச் சொல்லாமல் முடிந்தவரை நிறைவேற்றுவது எனப் பல்வேறு சவால்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்தத் துறையில் பேரார்வம் இருந்தால் இதையெல்லாம் எளிமையாகக் கற்றுக்கொள்ளலாம்” என்கிறார் ஷியாமளா.

நிகழ்ச்சி மேலாண்மையில் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. அந்த அம்சங்களில், எதற்கு நாம் பொருத்தமாக இருப்போம் என்று தெரிந்துகொள்வது முக்கியம். “நான் கல்லூரி நாட்களிலிருந்தே நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்திருக்கிறேன். அதனால், நான் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்வேன். இப்படி நம் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் இந்தத் துறையில் நிறைய வழிகள் இருக்கின்றன.

அதே சமயம், எல்லா வேலைகளையும் நாமே நிர்வகித்துவிட முடியும் என்றும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. ஒவ்வொரு வேலைக்கும் நம்பகமான நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஒப்படைக்கலாம். ஆனால், அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையைக் கவனமாகச் செய்ய வேண்டும். அதேசமயம், நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அதைச் சமாளிப்பதற்கு மாற்று ஏற்பாடுகளையும் யோசித்துவைத்திருக்க வேண்டும்” என்கிறார் ஷியாமளா.

தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்னர், ஏதாவது ஒரு நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் இருந்தால் இன்னும் நல்லது என்கிறார் இவர். “தன்னிச்சையாக உடனடியாக முடிவெடுக்கும் திறன் இந்தத்துறைக்கு மிகவும் அவசியம். உடல்நிலையை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டியது, எப்போதும் இன்முகத்துடனும், நம்பிக்கையுடன் உங்களை வெளிப்படுத்திக் கொள்வதும் முக்கியம். எனக்கு என் குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பு கிடைத்ததால் என்னால் இந்தத் துறையில் வெற்றிகரமாக செயல்பட முடிகிறது” என்கிறார் ஷியாமளா. (The Hindu: May 31, 2015 11:34)
Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.