நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : (ஐ) துப்பறியும் பயிற்சி விளையாட்டு-1.*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-21*

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Monday, June 4, 2018

(ஐ) துப்பறியும் பயிற்சி விளையாட்டு-1.*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-21*

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-21*
*(ஐ) துப்பறியும் பயிற்சி விளையாட்டு-1.*

*ஹலோ சுட்டீஸ் இந்த வாரம் முழுவதும் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு (ஐ) துப்பறியும் பயிற்சி விளையாட்டு.  ஆர்வத்தைத் தூண்டும் துப்பறிதல் துறை, துப்பு துலக்குதல் பற்றி தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டுக்கள். மறந்துவிடாதீர்கள் பயிற்சி விளையாட்டு பகுதி 21 முதல்....அனைத்தும் மிகச்சிறந்த வாழ்க்கையில் அவசியம் தெரிந்துவைத்திருக்கவேண்டிய முக்கியமான பயிற்சி விளையாட்டுக்கள்.*

சுட்டீஸ்களிடம், "நேற்று உன்னிடம் என்ன சொன்னேன்?" என்று அம்மாவோ அல்லது அப்பாவோ கேட்பது, சுட்டீஸ்களின் நினைவாற்றல் எந்த அளவில் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள, அது வெறும் மூளைக்கு தரும் பயிற்சிமட்டுமே. ஆனால் துப்பறியும் விளையாட்டு மூளையின் அறிவுத்திறனுக்கும், செயல்பாடுகளின் தன்மைக்கும் சவாலாக அமைந்த ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டில் உடலுழைப்பும்  அறிவுத்திறனையும் பயன்படுத்தி விளையாடும் ஒரு விளையாட்டு இது. 

வாங்க இன்றய விளையாட்டை விளையாடுவதற்கு முன்பாக துப்பறியும் துறைசார்ந்த சில விவரங்களை நாம் தெரிந்துகொள்வோம்.

துப்பறிவதைப்பற்றி சுட்டீஸ்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்போம். அதோடு நான் தொகுத்திருக்கும் சில சுவாரிசயமான துப்பறியும் தகவல்களையும் தருகிறேன்.

@ சுட்டீஸ்:- துப்பறியும் கதை என்று சொன்னாலே எனக்கு சினிமாவில் ஜேம்ஸ் பாண்ட் செய்யக்கூடிய சாகசங்கள்தான் ஞாபகம் வரும்.    

@கோகி(நான்):-துப்பறியும் கதைகளின் ராணியாகத் திகழ்ந்தவர் அகதா கிறிஸ்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாவல்கள் உலகெங்கும் கோடிக்கணக்கில் விற்பனையாகி இருக்கின்றன. ஆங்கிலம் அறியாத ஆனால், துப்பறியும் கதைகள் படிக்கும் ஆர்வம் மிக்கத் தமிழ் ரசிகர்களுக்கு இந்த நூல்கள் மிகத் திருப்தியை அளிக்கும். தெளிவான மொழிபெயர்ப்பு நூல்களும் தற்போது கிடைக்கிறது.

@ கோகி(நான்):-துப்பறியும் சாம்பு கதைகள் என்றால் எனக்கு மிகவும் பிடித்த கதைகள். அதோடு நான் சிறுவனாக இருந்த எனது பால்ய காலத்து நினைவுகள் மிகவும் இனிமையான நினைவுகள். 

@ சுட்டீஸ் :- துப்பறியும் சாம்பு, ராஜேஷ்குமார், எழுத்தாளர் சுஜாதா போன்றவர்கள் எழுதிய துப்பறியும் கதைகள் படித்திருக்கிறேன்.

@ கோகி(நான்):-மிகவும் புகழ்பெற்ற எனக்கு பிடித்த பழைய காலத்து அப்புசாமியும் சீதாப்பாட்டியும் கதையிலும் துப்பறிய சென்று முடியாமல் சொதப்பி மாட்டிக்கொள்ளும் சுவாரிஷ்யம் ரசிக்கவேண்டிய கதைகள்.

@ சுட்டீஸ்:- "என்னாகுமோ ஏதாகுமோன்னுதான். கொலை கேசு துப்பறிதல்.. திகிலாக இருக்கும்." 

@ நான் ஒரு விவரம் சொல்கிறேன் கேளுங்கள்:-  1957-இல்  அப்போது “திருவாளர் தேவன்” அவர்கள் ஆனந்த  விகடனின் பொறுப்பாசிரியராய் இருந்தார். அவர் "முத்து” என்ற பெயரில் பல அருமையான சிறுவர் கதைகளை எழுதியவர். அப்போது விகடன் உதவி ஆசிரியர்களில் ஒருவரான, “கோபு” கோபாலகிருஷ்ணன்.“ அவர்தான் "தேவன்” அவர்களின் மறைவிற்குப்பிறகு “தேவனின் “துப்பறியும் சாம்பு” படக்கதை வடிவில் 1958 ஏப்ரல் முதல் ஆனந்த விகடனில் பவனி வந்தது.  கோபுலுவின் கைவண்ணத்தில் படக்கதை மின்னியது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. உண்மையைச் சொல்லப் போனால், இன்றைய தலைமுறையில் பலருக்கு “ராஜு” என்ற ஓவியர் தான் முதலில் “சாம்பு” வுக்கு உயிரூட்டியவர் என்றே தெரியாது! அதாவது, ”சாம்பு” அவர்களின்  பதிவுகளையும், ராஜுவின் படங்களையும் பார்க்காதவர்கள்!: “சாம்பு” கதைகள் என்றவுடனே அவர்களுக்குக் “கோபுலு”வின் படங்கள் தான் நினைவுக்கு வரும்!  “சாம்பு”அவர்களின் முதல் துப்பறியும் காமிஸ் கதைப்பாடத்தை பாருங்கள்....

@ கோகி(நான்):-துப்பறிதல்  பற்றி திருக்குறளில் நமது திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். திருக்குறளில் ஒற்றாடல் என்கிற தனி அதிகாரத்தையே தந்திருக்கிறார். 

@ "வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று" (குறள்: 584) என்ற பாடலில் சொல்லப்பட்ட மூவகையினரும் ஒரு நாட்டின் அதிகார வட்டத்தில் இருப்பவர்கள் அல்லது இருந்தவர்கள் ஆவர். அரசு செலுத்துவதில் நேரடியாகத் தொடர்புடையவர்கள் ஆதலால் இவர்கள் செயல்பாடுகளைத் தொடர்ந்து நாடாள்வோன் கண்காணித்து வரவேண்டும் என்கிறார் வள்ளுவர். தமது அரசியல் செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி அரசுக்குத் தீங்கு இழைக்க வாய்ப்பு மிகையாக உள்ளவர்கள் இவர்கள். எனவே ஆட்சியாளர்க்கு மிக நெருக்கத்தில் இருந்தாலும் அவர்களையும் ஒற்று வளையத்தில் கொண்டுவர வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இன்றைய சூழ்நிலைகளுக்கும் இப்பாடல் எத்துணை பொருத்தமாகிறது என்பதைக் காணலாம்...

@கோகி(நான்):- ஆங்கில திரைப்பட உலகின் முக்கிய படமாக இன்று வரை கருதப்படும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் புகழ்பெற்றவை. உளவு, துப்பறிதல் ஆகிய காட்சியமைப்புகள் இப்படங்களில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், இத்திரைப்பட வரிசைகளில் 7 முறை கதாநாயகனாக நடித்த ரோஜர் மூர் (89) சென்ற வருடம் 2017 மே -மாதம் 23ம் தேதியன்று கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு ஸ்விச்சர்லாந்தில் காலமானார்.

@ நான் ஒரு தகவல் சொல்கிறேன் கேளுங்கள்:- சர்வதேச துப்பறிதல் நாவல்களில் மிகப்பிரபலமான "த-டா-வின்சி-கோட்" 2003ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் திரு டான் பிரவுனால் எழுதப்பட்ட மர்மத்-துப்பறிவுப் புனைவு நாவலாகும். இந்த புத்தகம் உலகமெங்கும் 80 மில்லியன் புத்தகங்கள் விற்பனையான சிறப்பு விற்பனைப்புத்தகமாகவும், 44 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதுவும் ஆகும். துப்பறிதல், திகில் மற்றும் முரண்பாட்டு புதின வகைகளை ஒன்றிணைத்து, ராபர்ட் லாங்டன் என்ற கதாப்பாத்திரத்துடன் வெளியிடப்பட்ட கதாசிரியர் பிரவுனின் இரண்டாவது நாவலாகும்.

என்ன சுட்டீஸ் இன்றய பயிற்சி விளையாட்டில் துப்பறிவதைப்பற்றிய சில தகவல்களை தெரிந்துகொண்டோம் அல்லவா? நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் துப்பறியும் விளையாட்டில், "அம்புக்குறி, சிகப்பு கைக்குட்டை" என்கிற ஒரு விளையாட்டை விளையாடப்போகிறோம். அடுத்த பயிற்சி விளையாட்டில் சந்திப்போமா?

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. 

*முன்னோட்டம்:-*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-22*
*(ஐ) துப்பறியும் பயிற்சி விளையாட்டு-2.*

No comments:

Post a Comment

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.