நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : August 2013

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Saturday, August 3, 2013

ஈவண்ட் மேனேஜ்மெண்ட் என்பது நிகழ்ச்சி மேலாண்மை.

நிகழ்ச்சி மேலாண்மை (event management) என்றொரு சுவாரசிய துறை.இருக்கிறது அதற்க்கென்று தனிப்பட்ட பட்டம் மற்றும் பட்டயப் படிப்பும் உள்ளது ...துபாய் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் திரு சபேசன் மற்றும் துபாய் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனக் காப்பாளர் மற்றும் பொதுச் செயலாளர் திரு சந்திரா ரவி ஆகியோர் இணைந்து "ரிதம் ஈவன்ட்ஸ்" என்ற புதிய நிகழ்ச்சி மேலாண்மை (ஈவன்ட் மேனேஜ்மென்ட்) நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

.......வழக்கம்போல தனது அலுவலகத்திற்குள் நுழைந்த சங்கர், இடம் காலியாக இருந்த கம்யூட்டரை தேர்வு செய்து, ஹெட்போனை தலையில் மாட்டியபடி காலில்(call) நுழைந்தான் "குட்மார்னிங் சார்.... ஐ ம் ஷங்கர், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் எக்ஸியூட்டிவ்....மே ஐ நோ இன் வாட் வே ஐ கேன் ஹெல்ப் யூ ?.........."

ஈவண்ட் மேனேஜ்மெண்ட் என்பது நிகழ்ச்சி மேலாண்மை. அதாவது உங்கள் வீட்டில் ஒரு பெரிய பர்த்டே பார்ட்டி வைக்கறீர்கள் என்றால், நீங்கள் சங்கர் மாதிரி நிகழ்ச்சி மேலாளர்களை அணுகி பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்து வீட்டு (அவர்களின் தலை(மை)யில் கட்டிவிட்டு) , சன் டிவியில் டாப் டென் மூவிஸ் பார்க்கலாம், இல்லாவிடில் உலகத் தொலைக்காட்சிகளில் ஆயிரத்து ஓராவது முறையாக ஸ்டார் மூவிஸ் போடும் மம்மி ரிட்டர்ன்ஸை பார்க்கலாம். சங்கர் உங்கள் பார்ட்டிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் (காய்கறி வாங்குவது, சமையற்காரர் வைப்பது, போலிஸ் பர்மிஷன் வாங்குவது, மைக்செட் வைப்பது, இண்ட்டீரியர் டிசைனிங் செய்வது, எமர்ஜென்சி மெடிக்கல் உதவி ஏற்பாடு செய்து, லைட்டிங், இன்விடேசன் அடிப்பது, etc...) செய்து தருவார். இவ்வுளவு வேலைகளையும் இழுத்துப்போட்டு கொண்டு செய்யும் திறமையுடைய ஜெண்டில்மேன் சங்கர்,.... அவரது சொந்த வீட்டு வேலையில் சிறு துரும்பைக்கூட நகர்த்தமாட்டாராம்.....

...இன்னும் தொடரும்......

ரேடியோ அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


radio_jockey
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் சமுதாய வானொலி நிலையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதில் நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக பணியாற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் தங்களது பெயருடன் வயது, கல்வித்தகுதி, அனுபவம், தொலைபேசி/கைபேசி எண் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல் – 637 002 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை namakkalkvkcrs@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.
விண்ணப்பதாரர்கள் குரல் வளம், உச்சரிப்புத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு செய்தி சேகரிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக பணியாற்ற அனுமதிக்கப்படுவர். அவர்கள் சேகரிக்கும் செய்திகளுக்கு மற்றும் தொகுப்பாளராக பணியாற்றும் காலத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு அணுகவேண்டிய தொலைபேசி எண் : 04286 – 266144.
Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.