நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : வானொலியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்க முதலில் வானொலியும் அதன் ஒலிபரப்பு பற்றிய விவரங்கள் சிறிது தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Wednesday, May 1, 2013

வானொலியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்க முதலில் வானொலியும் அதன் ஒலிபரப்பு பற்றிய விவரங்கள் சிறிது தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

#வானொலியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்க முதலில் வானொலியும் அதன் ஒலிபரப்பு பற்றிய விவரங்கள் சிறிது தெரிந்து வைத்திருக்கவேண்டும்.  பொதுவாக, ஒரு பண்பலை வானொலியின் ஒலிபரப்பு எல்லை என்பது 40 முதல் 50 கிலோ மீட்டர்களாகும். குறைந்த தூரம், தெளிவான, துல்லியமான ஒலிபரப்பு என்பதுதான் பண்பலையின் இலக்கணமாகும். இதில், விதிவிலக்காக, தமிழகத்தின் கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் உள்ளது. இதன் டிரான்ஸ் மீட்டர் என்கிற ஒலிபரப்பு கோபுரம் மலையின் உச்சியில் அமைந்திருப்பதால், இதன் ஒலிபரப்பு எல்லை, கிட்டத்தட்ட 250 முதல் 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றடைகிறது. இதனால், தென் தமிழகத்தின் 22 மாவட்டங்களுக்கு இதன் ஒலிபரப்பு சென்றடைகிறது. ஆகவே பண்பலை ஒலிபரப்பிற்கு, ஒலிபரப்பு கோபுரம் (ட்ரான்ஸ் மீட்டர் டவர்ஸ்) அவசியமாகிறது. இதே நிகழ்ச்சியை வானொலி தவிர அதன் இணைய வலைத்தொடர்பு (Internet) அமைப்பிலும் கேட்கலாம்.

ஆஸ்திரேலிய பண்பலையில் "வெட்டுப்புலி" என்கிற சிறுகதை நூல்கள்  குறித்த கலந்துரையாடல் நிகழ்ந்தது. அதை எதேச்சையாக இன்று அறிந்தேன். யாரோ, எங்கோ தூரதேசத்தில் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துரையாடியது பரவசமாக இருந்தது.




அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்தோர்: 
திரு.பார்த்தீபன், சத்யா, முகுந்த், நிமல், ஆகியோரக்ல் 
நூலின் பெயர் : வெட்டுப்புலி 
ஆசிரியர்: தமிழ்மகன் 
வெளியீடு: உயிர்மை பதிப்பகம் 
இணையத்தில் நூலினை வாங்க இங்கே சொடுக்கவும் http://uyirmmai.com/Publications/bookDetails.aspx?bid=262


சிறு குறிப்பு:- வெட்டுப்புலி தீப்பெட்டியில் ஒருவர் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்குக் கையை ஓங்கிக் கொண்டிருக்கிறார். அவர், தமிழகத்தின் செங்கல்பட்டு பூண்டி ஏரி பகுதியில் வாழ்ந்த நிஜமனிதர் என்று தெரிந்த அந்த வினாடியில் கதை ஆரம்பிக்கிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்தபோது, அத் தீப்பெட்டியின் வரலாறு, தமிழ் சினிமாவையும் திராவிட இயக்கங்களையும் துணைக்கு இழுத்துக் கொள்வது இயல்பான விறுவிறுப்பு. இந்த மூன்றுக்குமே இன்றைய தேதியில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு வயதாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி வெற்றி கண்டிருக்கிறார் நூலாசிரியர். சரித்திரமும் புனைவும் கூடித் தரித்தக் குழந்தை இந்த நாவலின் விலை இந்திய ருபாய் மதிப்பில் .Rs.220, சிங்கை வெள்ளியில் $5.00

No comments:

Post a Comment

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.