நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Wednesday, November 22, 2017

பள்ளிக்கூட நாட்களில் எனது நட்பு வட்டம் பெரியது...பின்னாளில் எந்த நிகழ்ச்சியையும் ஏற்று நடத்திட திடமான மனநிலையைத் தந்தது.

அப்போது நான் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் நேரம்... எனது இஸ்லாமிய (முஸ்லிம்) நண்பர்களான  "ஜமீர்  மற்றும் சலாவுதீன்" இன்று மாலை நாம் தர்காவிற்க்கு (மசூதி) செல்லவேண்டும் அருகே உறவினர் ஒருவரின் திருமண விழாவில் சங்கீத கச்சேரி உள்ளது.... உனக்கு சங்கீதம் பிடிக்கும் என்பதால் என்னுடன் வருகிறாய் என்றான்..... 

பள்ளிக்கூட நாட்களில் எனது நட்பு வட்டம் பெரியது, பல இனத்தவர்களில் நண்பர்கள் இருந்தார்கள். ஐயர் ஆத்து பையனான நான் எனது நண்பர்களுடன் தேவாலயமும் [எனது நண்பர்களில் ஒருவன் "பால் சாமுவேல் மனோகர்" தற்போது திருச்சிக்கருகே ஒரு கிருஸ்துவ தேவாலயத்தில் பாதிரியராக இருக்கிறார்.. மாணவப்பருவத்தில் நாங்கள் அவனை 'பாச மனோ' என்றுதான் அழைப்போம் அவனோடு ஞாயிற்றுக்கிழமைகளில் கிருஸ்துவ தேவாலயம் சென்றுவருவதும் ஒரு விளையாட்டான பிடித்த பொழுதுபோக்குகள்] அதேப்போல எனது இஸ்லாமிய நண்பர்களுடன் தலையில் கைக்குட்டை அணிந்து அவர்களின் தர்க்காவுக்கும் (மசூதிக்கு) சென்றிருக்கிறேன்.  எனது இஸ்லாமிய நண்பனின் வீட்டினர், ஐயர் பையன் என்பதால் அவர்களது வீட்டில் குடிக்கத்தரும் தண்ணீர் டம்ளரையும் இரண்டுமுறை நன்கு கழுவிவிட்டு எனக்கு தண்ணீர் பருகத்தருவார்கள். அத்தனை அன்பை என்னிடம் காட்டியதை என்றும் என்னால் மறக்கமுடியாத நினைவுகள். எனது மற்றொரு நண்பன் பெயர் "மஹாவீர்" ஜெயினமதத்தையும், பஞ்சாட்சரம் என்ற பெயருடைய நண்பன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மலைவாழ் இனத்தைச்சார்ந்தவன் மிக நன்றாக படிப்பவன் முதல் மதிப்பெண் எடுப்பவன் எனக்கு புரியாத கணக்குப் பாடங்களை அவன்தான் சொல்லித்தருவான் ஆறாம் வகுப்பிலிருந்து எனது நண்பன்.....  ஊரின் செல்வந்தரான வஜ்ரவேல் செட்டியார் மகனான சுந்தரவேலும் எனது பிரியமான நண்பன் நாங்கள் ஒவ்வொரு வருடமும் பள்ளி நாடகத்தில் கட்டாயம் சேர்ந்து நடிப்போம்.            

எனது இஸ்லாமிய (முஸ்லிம்) நண்பர்களான  "ஜமீர்  மற்றும் சலாவுதீன்" அன்றய கச்சேரி நிகழ்ச்சி பற்றி வேறு விவரம் ஏதும் சொல்லவில்லை, நண்பன் சொல்லிவிட்டான் என்பதால் என்னுடன் பள்ளியில் படித்த எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் "ஜெயந்தியிடம்" எனது வீட்டில் சொல்லிவிடும்படி கூறி, நண்பனுடன் அந்த சங்கீத கச்சேரிக்கு சென்றோம். கையில் புத்தகப்பைவேறு கனமாக இருந்தது, நிகழ்ச்சி மாலை நான்கு மணியிலிருந்தே தொடங்கிவிட்டது நாங்கள் உள்ளே நுழையும் பொது அந்த பாடல் ஒலித்தத்துக்கொண்டிருந்தது... . "இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுபாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடியதில்ல" நாகூர் E.M.அனிபா அவர்கள் பாடிக்கொண்டிருந்தார்.... இசைக்கருவிகளான புல்புல் தாரங் மற்றும் ஹர்மொனிய இசையும், ஷனாய் ஓசையும் அவரின் குரலோடு சேர்ந்து மனதைக்கவர்ந்தது ....(எல்லோரும் கொண்டாடுவோம், அருள் மேவும் ஆண்டவனே..,தலைவாரிப் பூச்சூடி உன்னை, எத்தனை தொல்லைகள், அதிகாலை நேரம்,காண கண் கோடி வேண்டும் ,தமிழுக்கு அமுதென்று பேர்) என அடுத்த மூன்று மணிநேரம் போனதே தெரியவில்லை. வீட்டிற்கு திரும்பும் பொது எதோ இனம் புரியாத ஒன்று மனதை அழுத்திக்கொண்டிருந்ததைப்போல் உணர்ந்தேன். 

வீட்டில் பெரிய கலாட்டா எனக்காக காத்திருந்தது... என் பள்ளி மாணவியான பக்கத்து வீட்டு ஜெயத்தியின் அம்மா, என் வீட்டாரோடு சண்டை, .... "என் மகள் என்ன உங்கள் வீட்டு வேலைக்காரியா என"???

... இதெல்லாம் உனக்கு தேவைதானா என என் அக்காவும் அம்மாவும் கோபித்துக்கொள்ள, அன்று இரவு அப்பா வீட்டிற்கு வந்ததும் அவரின் பங்கிற்கு அவர் அணிந்திருந்த பேண்ட் பெல்ட்டால் சாட்டையடி வாங்கியதும்...அன்றய அந்த நிகழ்ச்சி மறக்கமுடியாமல் மனதில் நிலைத்து நின்றது...... 

சிறுவயதுமுதலே சங்கீத கச்சேரி, பள்ளிக்கூட  நாடகம், இனம் மொழி என்று எந்த பிரிவினையும் மனதில் தோன்றாமல் அனைத்துமாதத்தினர்களின் கொண்டாட்டங்களில் நிகழ்ச்சியிலும் பங்குகொண்டது பின்னாளில் எந்த நிகழ்ச்சியையும் ஏற்று நடத்திட திடமான மனநிலையைத் தந்தது என்றால் அது சிறு வயதிலிருந்தே மனதில் ஊறிப்போன செயலே.     
வாடாமலர் நினைவுகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.    https://youtu.be/gzMOsaT3Xkw ...

Wednesday, December 28, 2016

நிகழ்சியின் ஐம்பது சதவீத 50% செலவை மிச்சம்பிடிப்பது எப்படி?

பாதியளவு செலவில் நிகழ்ச்சியை நடத்துவது எப்படி அதாவது நிகழ்சியின் ஐம்பது சதவீத 50% செலவை மிச்சம்பிடிப்பது  எப்படி? :-   

ஐம்பது சதவீதம் 50% தள்ளுபடி செலவில் வண்டிச்சத்தம் அதாவது மிச்சப்படுத்தும் வண்டிவாடகை, என்று தளவாடவியலில்(Logistics-லாஜிஸ்டிக்ஸ்)  ஒரு கோட்பாடு  உண்டு.  அதாவது நீண்ட தூரம் பயணிக்கும்,  முழுவதும் நிரம்பிய ஒரு கனரக சரக்கு வாகன சேவைக் கட்டணம் என்பது,  அந்த வாகனம் சென்று சேரவேண்டிய இடத்திற்கு சென்று திரும்புவதற்கான மொத்த அல்லது அதன்  முழுமையான செலவுகளைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது.  இருந்தாலும் சென்று சேரவேண்டிய இடத்தில் சரக்குகளை இறக்கியதும் திரும்ப தனது பழைய இடத்திற்கு திரும்புவதற்கு ஏதும் சரக்கு சவாரி கிடைக்காதபோது, வாகனம் காலியாக திரும்புவதைவிட அந்த வாகனம் திரும்பி வர தேவையான எரிபொருள் செலவையாவது மிச்சப்படுத்தி லாபம் ஈட்டுவதற்கு, வாகன உரிமையாளர் அவரின் வாடிக்கையாளர்களிடம் ஐம்பது சதவீத செலவில் சரக்கு சேவை தருவதற்கு முன்வருவார்.  இந்த ஐமபது சதவீத வண்டிவாடகை செலவில் சரக்குகளை விநியோகிக்க சில நிறுவனங்கள் இந்த சேவைக்காக காத்துக்கிடப்பதும் உண்டு. 

இதைப்போலவே நிகழ்ச்சி தயாரிப்பில் ஒரு உதாரணத்திற்கு,  இந்தியத் தலைநகர் புது தில்லியில் நடைபெறும் பல கலை நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட சில மாதங்களில் நடத்துவது  சிறப்பாக கருதப்படுகிறது, காரணம் சுதந்திரதினம், குடியரசு தினம் போன்ற அரசு சார்ந்த பெரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் நாட்டின் பலப்பகுதியிலிருந்து பல மாநில கிராமியக்  கலைக்குழுக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரசாங்க செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அப்படி வரக்கூடிய கலைக்குழுவினர்களை மிக குறைந்த செலவுகளில், நகரத்தின் அருகாமையில் அமைந்திருக்கும் பல பகுதியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளமுடியும்.  பல கிராமியக் குழுவினர் இலவசமாகக்கூட சில நிகழ்ச்சியில் பங்குகொள்ள முன்வருகிறார்கள். அப்படி முன்வருபவர்களையும் பல நிகழ்ச்சியில் பயன்படுத்திக்கொண்டு அவர்களை பாராட்டி பல பரிசுகள் வழங்கியிருக்கிறோம். 

@ ஒரு திருமண நிகழ்ச்சியில் "கிராமிய பாடல் கச்சேரி" "கரகாட்டம்",  "பரத நாட்டியம்",  "வாத்தியக்குழுவினர்களின் கச்சேரி"  


@  கோவிலில் திருவிழா நிகழ்ச்சியில், திறப்புவிழா நிகழ்ச்சியில், பிறந்தநாள் மற்றும் மணநாள் நிகழ்ச்சியில், பொருட்காட்சி, சிறப்புக் கூட்டங்கள், கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கிராமிய கலைக்குழுக்கள் பங்குபெறும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 

@ நாட்டுபுற பாடல்கள், வில்லுப்பாட்டு, பறையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகம், காவடி, தெருக்கூத்து, நாடகம், சிலம்பம், குத்து, தப்பு, புலியாட்டம் போன்ற நம்முடைய பாரம்பரிய கிராமியக்கலை, கிராமிய விளையாட்டுகளையும்  பாடல்களையும் அருகிருந்து பார்க்கவும், பாதுகாக்கவும் நாம்தான் முயற்சிக்க வேண்டும். ஆகவே இசையோடும் பழம்பெரும் கலைகளோடும் இணைந்து இன்புற்றிருக்க உங்களுக்கு தோன்றினால் நமது வாழ்வில் நடக்கும்  அனைத்து நிகழ்ச்சியிலும் நாட்டுப்புற கலைகளுக்கு வாய்ப்பை வழங்க நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம் என்கின்ற எண்ணங்களையாவது நமது மனதில் நிலை நிறுத்துவோம். 

ஆகவே எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்த நினைக்கும்போதே இப்படிப்பட்ட பல விவரங்களில் நாம் கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம்.  

சிங்கை என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் மற்றும் மலேசிய, மொரிசியஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் பல உல்லாச விடுதிகளில் நடக்கும் நிகழ்ச்சியில் கட்டுப்படுத்தப்பட்ட, குறைந்த  செலவுகளில், செலவுகளை மிச்சயப்படுத்தும் நோக்கில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் நான் நேரடியாக கலந்துகொண்டிருக்கிறேன். பல கலைக்குழுவினர்கள் மற்றும் இசைக்குழுவினர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தி விளம்பர படுத்துவதற்காகவும், உல்லாச விடுதி நிகழ்சியில் பங்குகொள்ள முன்வருகிறார்கள்.   அவர்களின் நோக்கம் நிகழ்ச்சிக்கு வரும் உல்லாச விடுதி விருந்தினர்களை கவர்ந்து அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வாய்ப்பினைப் பெற்று மேலும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருமானம்  சேர்க்கவேண்டும் என்கிற எண்ணத்தில் போட்டி போட்டுக்கொண்டு, விளம்பரத்திற்காக இலவசமாகவே உல்லாச விடுதி நிகழ்சியில் பங்குகொள்ள முன்வருகிறார்கள்.  

ஆகவே சிலவுகளை மிச்சப்படுத்தி ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்ப்பது என்பது,  நிகழ்ச்சி தயாரிப்பின் மிக முக்கிய நோக்கமாகவே கருதப்படுகிறது.  இனி நீங்கள் உங்களின் சொந்த நிகழ்சிகளை நடத்த திட்டமிடும்போது,  நிகழ்ச்சிக்கான செலவுகளை பாதியாக குறைப்பது எப்படி என சிந்தித்து அதற்க்கேற்றாற்போல நிகழ்ச்சியை நடத்த, உங்களது அனுபவம்.... உங்களுக்கு சிறந்த வழிகளைக் கற்றுத்தரும். அல்லது நிகழ்ச்சி தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த ஒருவரை பக்கபலமாக வைத்துக்கொண்டு நிகழ்ச்சியை நடத்த திட்டமிடுங்கள்.  

வாய்ப்புகள்  எங்கும் கொட்டிக்கிடக்கிறது..... வாய்ப்புக்களை உருவாக்கவோ அல்லது இருக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ளவோ ....அப்படிப்பட்ட வாய்ப்புக்களை எப்படி தேடி கண்டுபிடித்து, மிகச் சரியாக  பயன்படுத்திக்கொள்வது என்பதுதான் மிக முக்கிய சவாலாக நம் முன்னே நிற்கும் கேள்வி? 

குறைந்த சிலவிலோ அல்லது இலவசமாகவோ ஒரு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தவேண்டுமா? கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது எப்படி என்கிற நிகழ்ச்சிகளின் அனுபவ நுணுக்கங்களை, நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை பக்கங்களின்வழியே பல அனுபவம் பெற்றவர்களின்  பதிவுகளிலிருந்து  உங்களுக்கு பயன் கிடைக்கும் என நம்புகிறோம். நன்றி. 

Tuesday, December 27, 2016

"தாத்தா பாட்டிகள் உள்ள வீடு-முன்பெல்லாம் கிராமங்களில் இரவு ஒன்பதுமணியானால் போதும் ....

கதை சொல்வது என்பது நம் தமிழ் கலாச்சாரத்துடன் ஒன்றிய ஒரு வழக்கம். இது காலங்காலமாக நம் பண்பாட்டுடன் கலந்து, வளர்ந்துவரும் ஒன்று. .."தாத்தா பாட்டிகள் உள்ள வீடு" ஆயிரக்கணக்கான புத்தகங்களை கொண்ட நூலகத்திற்கு சமம் !" 

முன்பெல்லாம் கிராமங்களில் இரவு ஒன்பதுமணியானால் போதும் வீட்டுக்கு வெளியே இருக்கும் ஆலோடி எனப்படும் வராண்டாவில் பாட்டி அமர அவளைச் சுற்றி அவள் மடியில் தலைவைத்து சுவாரஸ்யமாக கதைகள் கேட்பது வழக்கம். அவளும் கருத்துச் செறிந்த, வீரமிக்க இதிகாச, புராண, சமூகக் கதைகள் சொல்வாள். அவைகளைக் கேட்டு குழந்தைகளாகிய நம் மனதில் நல்ல பண்பு, பழக்க வழக்கங்கள், வீரம் வளர்வதுமுண்டு. 
இதன் அடிப்படையில் நம் முன்னோர்களும் பஞ்சதந்திரக் கதைகளென்று நீதி மேம்படவும், விக்ரமாதித்தன் கதைகளென்று நம் புத்தியைத் தீட்டக்கூடிய பலவற்றை எழுதி நமக்களித்துள்ளனர்.

வேனிற்காலங்களில் பெரும்பாலும் நதிகள் வற்றிவிடும். அந்த ஆற்று மணலில் தெருக்கூத்து என்று பல சரித்திரக் கதைகளை நடித்துக் காட்டிச் சொல்வதுமுண்டு. கேரளத்தில் சாக்கியார் கூத்து என்று கதைசொல்லும் பழக்கமும் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இது தவிர கோயில்களில் திருவிழாக் காலங்களில் கதாகாலட்சேபம் என்ற நிகழ்ச்சி நடைபெறுவது இன்றும் வழக்கிலுள்ளது. பொம்மலாட்டங்கள் மூலமாகவும் அக்காலத்தில் பல தெய்வீகக் கதைகளும் சொல்லப் பட்டு வந்தது.
இவையாவும் காலப் போக்கில் வளரும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கதை சொல்லும் இக் கலையை செப்பனிட்டு இப்போதெல்லாம் திரைப்படங்கள் வாயிலாக பல கதைகள் சொல்லப்பட்டு வருவதை நாம் நன்கறிவோம். 
தற்சமையம இந்திரா காந்தி தேசிய கலை மையம் வழங்கும் சர்வதேச கதைசொல்லும் விழா நடைபெறுவதுகேட்டு காலங்காலமாக கதைகளைச் சுவைத்துவந்த எனக்கு மிக்க மகிழ்ச்சியாயிருக்கிறது. இந்தக் கதைசொல்லும் கலை மென்மேலும் பலர் பங்கு பெற்று ஊக்குவிக்கப்பட்டு விரிவடைந்து வளர வேண்டும் என்பதே என் அவா!
நன்றி... 

Saturday, February 6, 2016

சர்வதேச கதைசொல்லும் விழாவில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற...

இந்திரா காந்தி தேசிய கலை மையம் வழங்கும் சர்வதேச கதைசொல்லும் விழாவில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற...

தேசிய கதை சொல்லும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை புது தில்லியில் இயங்கிவருகிறது.  இந்த அரசு இலவசப் பயிற்சிப்பட்டறையில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்திரா காந்தி தேசிய கலை மையம் வழங்கும் சர்வதேச கதைசொல்லும் விழாவில் பங்குபெறும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.  IGNCA-இந்திரா காந்தி தேசிய கலை மையம் வழங்கும் "சர்வதேச கதை சொல்லும் விழா" பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் நிவேஷ், அமைப்புடன் இணைந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அரசு சாரா விழாவாக நடந்துவருகிறது. 

கலைக்குழு வைத்திருப்பவர்கள் இந்த தேசிய மையத்தோடு தொடர்புகொண்டு அவர்களது கலையை சர்வதேச அளவில் காட்சிப்படுத்த, இந்த தேசிய மையம் உதவி செய்து வருகிறது தினமும் மாலை  4 மணி முதல் 8 மணி வரை இந்த மையத்தின் கதை சொல்லும் திறன் மேம்பாட்டுப் பட்டறையில் கலந்துகொண்டு அவர்களது திறனை மேம்படுத்திக்கொள்ளலாம். 

கதை சொல்லும் ஒவ்வொரு மாணவர்களும்  25 நிமிடங்களில் 2 கதைகள் சொல்லவேண்டும். திருமதி டாக்டர் மங்களம் சுவாமிநாதன் அவர்கள் கதை சொல்லும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறைக்குப் பொறுப்பேற்று நடத்திவருகிறார். (Smt. Dr. Mangalam Swaminathan (Programme Director-Kaladarsana Division, IGNCA)

தொலைப்பேசியில் தொடர்புகொள்ள  91+011+23388155, 


இனைய முகவரி http://ignca.nic.in/

Sunday, December 6, 2015

நிகழ்ச்சி மேலாண்மையில்-"நாயின் வேலையை நாயும் கழுதையின் வேலையை கழுதையும் செய்யவேண்டும்"

நிகழ்ச்சி தயாரிப்பில் திட்டமிடுதலும், திட்டமிட்டபடி செயல்படுத்துவதும் மிக முக்கியமானதாகும். நிகழ்ச்சி மேலாண்மையில், அவரவர் வேலையை அவரவர் செய்வதே சாலச் சிறந்தது அதாவது நாயின் வேலையை நாயும், கழுதையின் வேலையை கழுதையும் செய்யவேண்டும். அப்படி இல்லாமல் ஒருவர் வேலையை மற்றவர் செய்தால் அதன் விளைவு "அடி உதை தான் மிஞ்சும்" என நமது முன்னோர்கள் ஒரு கதையை நமக்கு கூறியிருக்கிறார்கள். 


முக்கியமாக ஒரு நிகழ்ச்சியின் நிர்வாகிகளின் நிர்வாகத் திறமையின்மைக்கூட நிகழ்ச்சியை கெடுத்துவிடும். ஒரு திருமண விழாவில் அரசியல் தலைவர் ஒருவர் தலைமை ஏற்று நடத்துகிறார் என்றால், சிறந்த அனுபவம் வாய்ந்த நிர்வாகியால் மட்டுமே அந்த திருமண நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முடியும். நிகழ்ச்சியில் சிறு பிழை ஏற்பாட்டாலும் விளைவுகள் வேறுவிதமாக மாறிவிடும், ஆகவே அப்படிப்பட்ட பதற்றத்தை தரக்கூடிய நிகழ்சிகளை நடத்த திட்டமிடும்போது, அந்த நிகழ்ச்சியை நிவகிக்ககூடிய நிர்வாகிகள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட செயலை மட்டுமே கவனத்தில் வைத்து செயல்பட்டால் அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். இதைத்தான் நாயின் வேலையை நாயும், கழுதையின் வேலையை கழுதையும் செய்யவேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்..... அப்படி முன்னோர்கள் கூறிய அந்தக்கதைதான் என்ன?


ஒரு ஊரில் துணிகளை துவைக்கும் சலவைத் தொழிலாளி ஒருவர் அவரது வீட்டில் அவருக்கு உதவியாக இருக்க ஒரு கழுதையையும், அவரின் வீட்டு காவலுக்கு என ஒரு நாயையும் மிக அன்போடு பராமரித்து வளர்த்துவந்தார்.

ஒருநாள் இரவு ஒரு திருடன் அந்த சலவைத் தொழிலாளியின் வீட்டில் இருக்கும் பொருளை திருடுவதற்காக சிறிது தொலைவில் மறைந்திருந்து, இரவு அனைவரும் தூங்கட்டும் பிறகு திருடலாம் என காத்திருந்தான்.


இதைப்பார்த்துவிட்ட சலவைத் தொழிலாளியின் வளர்ப்புக் கழுதை, தமது எஜமானர் வீட்டுக்கு திருடன் திருட வந்திருப்பது தெரிந்து மனம் பதறியது, கழுதையின் அருகே அமைதியாக படுத்திருக்கும் அந்த வீட்டு நாயிடம், கழுதை தனது பதற்றத்தை கூறி அவர்களது எஜமானரை எழுப்பி நடக்கவிருக்கும் திருட்டை தடுக்க உதவுமாறு கூறியது. அதற்க்கு நாயும் அந்த திருடன், திருட ஒளிந்திருப்பதை பார்த்துவிட்டதாகவும், திருடனை பிடித்து திருட்டை தடுக்கவேண்டியது இந்த வீட்டு நாயான தன்னுடைய வேலை எனவே நான் பார்த்துக்கொள்கிறேன், கழுதையே நீ சற்று அமைதியாக உன்னுடைய வேலையை கவனி என்றது.


பதற்றமாக இருந்த கழுதை, எப்படியாவது திருடன் வந்திருப்பதை தமது எஜமானருக்கு தெரியப்படுத்தவேண்டும் என தனது சக்தியை எல்லாம் திரட்டி உரக்க கத்தியது .....


கழுதையின் கத்தலைக் கேட்ட சலவைத் தொழிலாளி தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டான், இந்தக் கழுதை ஏன் இப்படி நாடு இரவில் எனது தூக்கத்தைக் கெடுத்து கத்துகிறது என்று வீட்டின் கூரையில் சொருகி இருந்த உருட்டுக் கட்டையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியில் வந்தான், அங்கு கத்திக்கொண்டிருந்த கழுதையின் முதுகில், தனது கையில் வைத்திருந்த உருட்டுக் கட்டையால் ஓங்கி ஒரு அடி அடித்து, கழுதையே உனக்கு என்ன வந்தது வாயை மூடி அமைதியாக படுத்துக்கிட, ஏன் எனது தூக்கத்தைக் கெடுக்கிறாய் என்று கூறி மேலும் ஒரு உருட்டுக்கட்டை அடியை கழுதைக்கு தந்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டான். 


இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நாய், கழுதையைப் பார்த்துக் கூறியது. நாயின் வேலையை நாயும், கழுதையின் வேலையை கழுதையும் என "அவரவர் வேலையை அவரவர் செய்யவேண்டும் இல்லையென்றால் இப்படித்தான் உதய் விழும்" என்றது.....        


இது நிகழ்ச்சி மேலாண்மைக்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் முன்னேற, சிறந்த இடத்தைப் பிடிக்க ஒவ்வொருவருக்கும் 
 தேவை, ஆகவே அவரவர் வேலையை அவரவர் செய்வதே சாலச் சிறந்தது அதாவது "நாயின் வேலையை நாயும் கழுதையின் வேலையை கழுதையும் கதையைப்போன்று செய்யவேண்டும்". 


நான் பலநேரம் இதுபற்றி சிந்தித்ததுண்டு, இன்னமும் கூட பலர் அவர்களின் அலுவலகத்தில், அவர்களது வேலையை செய்யாமல் பிறரது வேலையை செய்து மாத சம்பாத்தியம் பெறுகிறார்கள்.  எப்போது ஒருவர் தன்னுடைய வேலை இது என்று உணர்ந்து, தனது வேலையைமட்டும் சிறப்பாக செய்து பேரும் புகழும் பெற்று உயர்வு பெறுகிறார்களோ, அவரே அவர்களது வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் அவர்களது ஆரம்ப இடத்திலேயே சரியாக வாழக்கையை அமைத்துக்கொள்ளாமல் திணறி தனது முடிவுக்கு தானாகவே காரனமாகிவிடுகிரார்கள். இதை வைத்துத்தான் நீங்கள் பணிபுரியும் உங்களின் நிறுவனம் உங்களின் திறனை மதிப்பிடுகிறது.


உதாரணத்திற்கு வகுப்பில் உள்ள மாணவர்களிடையே நன்றாக படிப்பவன் சுமாராக படிப்பவன் என்ற பேதம் இருந்தாலும் யார் தன் நிலையிலிருந்து மிகுந்த முன்னேற்றம் அடைகிறார்களோ அவர்களே ஆசிரியரின் கவனத்தை மிகவும் கவருவார்கள். அந்த மாணவனே சிறந்த மாணவனாக ஆசிரியரால் முன்நிருத்தப்படுகிறான். ஆகவே நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் உங்களுக்குண்டான வேலையைமட்டும் சிறப்பாக செய்து பெரும் புகழும், அதற்குரிய ஊதியமும் பெற்று வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கவேண்டும். சிலருக்கு தன்னுடைய வேலை எது என்றுகூட பிரித்து தெரிந்துகொள்ளக்கூடிய திறமையில்லாமல், மற்றவரது வேலைதான் தன்னுடைய வேலை என்று வாழ்க்கையை வாழத்தெரியாமல் வீனடித்துக்கொண்டிருக்கிரார்கள். இந்தப் பதிவை மேலும் தொடர்ந்து படியுங்கள் பல விவரங்கள் உங்களுக்குப் புரியும் . 


முதலில் அலுவலகத்தில் உங்களது பனி எது என்று தெரிந்துகொண்டபின், அந்தப் பணியை சிறப்பாக செய்வதோடு உங்களது சுய முன்னேற்றத்திற்கான பணியையும் சேர்த்து செய்தால் தான் நீங்கள் சிறப்பான இடத்தை அடையமுடியும். அதற்க்கு உங்களது அலுவலகப்பணியை குறித்த நேரத்திற்கு  முன்பாகவே முடியுமாறு செய்து முடித்து, அதில் கிடைக்கும் உபரி நேரத்தில் உங்களின் சொந்த முயற்சிக்கான வேலைகளையும் செய்யவேண்டும். 


உதாரணமாக உங்களின் அலுவலக வேலை 8-மணி நேரம் என்றால், நீங்கள் 8-மணி நேரத்தில் செய்யவேண்டிய வேலையை 6-மணி நேரத்திலேயே செய்து முடித்துவிட்டு 2-மணி நேரத்தை மிச்சப்படுத்தி உங்களின் சொந்த முயற்சிக்கான, உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளும் செயல்களை செய்து சிறப்பான நிலையை அடைய பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஆகவே ஒரு நாளைக்கு 24மணி நேரம்  என்றால், ஒவோவ்று 8-மணி நேரத்தில் நீங்கள் சேமிக்கும் 2மணி நேரம் உங்களுடைய நேரமாக, உங்களின் உயர்வுக்காக மட்டும் செலவு செய்யக்கூடியதாக, ஒருநாளைக்கு  6மணி நேரம் உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது ஒரு நாள் என்பது உங்களுக்கு (நாள் 24 மணி + உங்களுடைய சேமிப்பு  6 மணி  = 30மணி நேரம்). மற்றவர்களுக்கு வெறும் 24மணி நேரம். "அதாவது 
இது உங்களுக்கு பணம்பழம போன்ற நெல்லிக்கனி"  (புரிகிறதா? இல்லையென்றால் மேற்கூறிய உதாரணத்தை திரும்ப திரும்ப படித்துப்பாருங்கள் புரியும்).


மேலும் தற்போது உங்களின் ஊதியம் 1000/- என்றால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளின் அது இரண்டு மடங்காக 2000/- என ஊதியம் அதிகமாக கிடைக்குமாறு, அதற்குத் தேவையான முயற்சிகளை செய்வதுதான், உங்களின் உயர்வுக்கான சொந்த முயற்சிக் குறிக்கோளாக இருக்குமாறு, நீங்கள் தினமும் சேமிக்கும் உங்களின் உபரி நேரத்தில் அதற்க்கான முயற்சிகளை செய்யும் நேரமாக அமைத்துக்கொள்ளுங்கள்.


இப்போது நமது உயர்விற்கான நமது தலைவிதியை எப்படி மாற்றி அமைத்துக்கொள்வது என்பதைப் பார்ப்போம். இதற்க்கு நாம் நமது அனைவரது வாழ்விலும் உள்ள ஒரு உதாரணத்தை இங்கு எடுத்துக்கொள்வோம். வழக்கமாக நாம் அலுவலகம் செல்ல பேரூந்து நிறுத்தத்தில் பலமணி நேரம் காத்துக்கிடந்தும் நமக்குத் தேவையான அந்த பேரூந்து உடனே வருவதில்லை. பத்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று இருந்தாலும் அரை மணிநேரமாகியும் எந்த ஒரு பேரூந்து வாராதது நமது தலைவிதி என்று நினைப்போம். மறுநாள் நமக்கு பேருந்தில் செல்லவேண்டிய அவசியமிருக்காது, நாம் வேறு வேலையாக நேற்று நின்றிருந்த அந்தப் பேரூந்து நிலையத்தைக் கடக்கின்றபோது, நேற்று எந்த பெரூந்திர்க்காக வெகுநேரம் காத்திருந்தோமோ அதே பேரூந்து ஒன்றன்பின் ஒன்றாக காலியான இருக்கைகளுடன் இரண்டு பேரூந்துகள் செல்வதைப்பார்க்கலாம். ஆகவே ஒன்று நிச்சயமாக தெரிகிறது, எது நமக்கு வேண்டுமோ அது நமக்கு கிடைக்காது, எது நமக்கு வேண்டாமோ அது நிறைய கிடைக்கும்" இதுதான் நமது தலைவிதி என்று தெரிந்துவிட்டதால் இனி நாம் நமது வாழ்க்கையை எது கிடைக்கிறதோ அதை நோக்கி அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கவேண்டும். அது எப்படி என்று மேலும் தொடர்ந்து இப்பதிவை படியுங்கள்.  
தொடரும் .... 
அன்புடன் கோகி-ரேடியோ  மார்கோனி. புது தில்லியிலிருந்து.....


    

      
  

Monday, November 9, 2015

வானொலியில் உங்களது நிகழ்ச்சி இடம்பெரவேண்டுமா?

வானொலியில் உங்களது நிகழ்ச்சி இடம்பெரவேண்டுமா?  
வானொலி நிகழ்ச்சி தயாரிப்பு:-

முதலில் திட்டமிடுங்கள், நீங்கள் தயாரிக்கப்போகும் வானொலி நிகழ்ச்சி தனியாக செய்யும் நிகழ்ச்சியா அல்லது கூட்டாக சேர்ந்து செய்யும் நிகழ்ச்சியா????
தனியாக செய்யும் நிகழ்சிகள்:- கதைநேரம், கதையும் திரைப்படப் பாடலும், அன்னையர் தினம், "மே" தினம் போன்ற பலவகைப்பட்ட "தினங்கள்" கொண்டாடுவதற்கான நிகழ்ச்சி தொகுப்புகள், சொந்த மற்றும் பிறரின் அனுபவங்களின் தொகுப்புகள், பலவித சங்கீத நிகழ்சிகள், "நான் ரசித்த, இன்று ஒரு தகவல், உங்கள் விருப்பம், உணவே மருந்து, சிரிப்பும் சிந்தனையும், நாட்டு நடப்பு, உலக நடப்பு, தெரிந்துகொள்ளுங்கள்........" என்கிற தலைப்பில் பல விவரங்களை பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சி, மற்றும் ஆன்மிகம் சார்ந்த நிகழ்சிகள், பண்டிகை சார்ந்த நிகழ்சிகள் (ஏன் பண்டிகை கொண்ண்டாட வேண்டும், காரணம், பயன்,போன்ற பல்வேறு விவரங்களுடன்), இப்படி இன்னும் பல தலைப்புகளில் செய்யலாம்.
கூட்டாக சேர்ந்து செய்யும் நிகழ்சிகள்:- சமுதாய விழிப்புணர்வுக்கு பாதை காட்டும் குறு நாடகங்கள், உலக நிகழ்வுகளை உரசிப்பார்க்கும் தினம் ஒரு பார்வை, பல ஆன்றோர் பெரியோர்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்சிகள், சாதனைகளை அறியத்தரும் நேர்காணல்கள் (நேருக்கு நேர் நிகழ்ச்சி), முக்கியச்செய்திகளைப் பற்றி பல்துறையை சார்ந்த வல்லுனர்களுடன் ஓர் அலசல், இதுபோன்ற இன்னும் பலவகையான நிகழ்சிகள்.
சரி இப்போது தனியாக செய்யும் நிகழ்ச்சி பற்றி பார்ப்போம்:- இதை இரண்டு பிரிவாக பிரிக்கலாம் முதலில் நீங்களே உங்களின் குரலில் நிகழ்ச்சியை வழங்குவது அல்லது வானொலி நிலையத்தின் இயக்குனரிடம் உங்களின் நிகழ்ச்சியை வழங்கி நிலையத்தார்களே நிகழ்ச்சியை வழங்குமாறு பணித்தல்.
வானொலியில் உங்களின் சொந்த குரலில் நிகழ்ச்சியை வழங்கவேண்டும் என்றால் அதற்க்கு முதலில் உங்களுக்கு வானொலி மொழிநடை, பேச்சு திறன், குரல் மற்றும் சொல் உச்சரிப்பு திறன் போன்றவை அவசியம் தெரிந்திருக்கவேண்டும்...
இப்போது நீங்களே தனிமையில் செய்யும் ஒரு நிகழ்ச்சியை தயாரிக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், அதற்க்கு என்ன என்ன தேவை, முக்கியமாக கவனிக்கவேண்டியவைகள் எவை எவை? தொடர்ந்து இணைந்திருங்கள் அடுத்த பகுதியில் தெரிந்துகொள்வோமா ???!!!!!!!!..................

உங்களின் சொந்த குரலில் நிகழ்ச்சியை வழங்கவேண்டும் என்றால் அதற்க்கு முதலில் உங்களுக்கு வானொலி மொழிநடை, பேச்சு திறன், குரல் மற்றும் சொல் உச்சரிப்பு திறன் போன்றவை அவசியம் தெரிந்திருக்கவேண்டும், ஆகவே ஆரம்ப காலத்தில் பேசாமல் வானொலி நிலையத்தின் இயக்குனரிடம் உங்களின் நிகழ்ச்சியை வழங்கி ஒலிபரப்ப செய்யலாம்.
உங்களின் நிகழ்ச்சியை பெற்றுக்கொள்ள யாரும் வரிசையில் நின்ருகொண்டிருக்கப்போவதில்லை, நீங்களாகவே அதற்க்கு முயற்சி செய்யவேண்டும். எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
பல சின்னத்திரை மற்றும் வானொலி நிலையங்களின் நிகழ்சிகளில், விளம்பரதாரர் நிகழ்ச்சி (குறும்படம் அல்லது கதைத்தொடர், மற்றும் பல்வேறு பல்சுவை நிகழ்சிகள்) இடம்பெறுவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சியில்தான் உங்களின் நிகழ்ச்சியும் இடம்பெறப்போகிறது. அதற்க்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்.
நாம் அன்றாடம் பொழுதுபோக்காக செய்யும் பல செயல்களை ஒன்று திரட்டி ஒரு நிகழ்ச்சியாக செய்தால், அது ஒரு பயனுள்ள பொழுதுபோக்காக அமையும். அதை மிகவும் எளிய முறையில் எப்படி செய்யலாம் என பலரும் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் உங்களின் எண்ணங்களை தாராளமாக இங்கு குறிப்பிடலாம்.
எந்தெந்த வகையில் திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும் செய்யலாம்:-
நீங்கள் அன்றாடம் கேள்விப்படும் அல்லது உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்களை சேகரித்து அதை எப்படியெல்லாம் ஒரு நிகழ்ச்சியாக தயாரிக்கலாம் என்பதை கீழ் கண்ட தலைப்பின் கீழ் வகைப்படுத்தி எளிமையாக செய்வதற்க்கு சில குறிப்புகள் உங்களுக்கு இந்த முகநூல் பக்கத்தில் கிடைக்கும்.
தொலைகாட்சி  மற்றும் வானொலியில் விளம்பரதாரர் நிகழ்ச்சி தாயாரிப்பது எப்படி? அதற்க்கு தேவையான நிதியை எப்படி பெறுவது?
# இலவச விளம்பர நாலிதழ், வார இதழ் போன்ற பத்திரிகை தயாரிப்பது எப்படி அதற்க்கு தேவையான செலவு நிதியை எப்படி பெறுவது?
‪#‎ஒரு பொதுக்கூட்டத்திற்கு தேவையான திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பதும்.
#ஒரு கண்காட்சியை நடத்துவதற்கு தேவையான திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும்.
#ஒரு அலுவலகம், கருத்தரங்கு, முக்கிய நிகழ்சிகள், ஆண்டுவிழா, பிறந்தநாள், மணநாள், பண்டிகை மற்றும் விழா கொண்டாட்டங்கள், சங்கங்கள், மன்றங்கள் சிறப்பு பொதுக் கூட்டங்கள், சுற்றுலா, கோவில் விழா, என பல்வேறு நிகழ்சிகளுக்கு திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பு மிகவும் அவசியம். 
முதலில் விளம்பரமும் அது சார்ந்த விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்:-
‪#‎ஒரு வானொலி விளம்பரத்தைத் தயாரிக்கும் போது உங்களுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. நீங்கள் உரையைத் தயாரித்து வழங்கி, அறிவிப்பாளர் அதைப் படிக்கலாம். அல்லது நீங்கள் ஒலி நாடாவை வழங்கலாம். நீங்கள் பின்னதைத் தேர்வு செய்தால், ஒரு தொழில் ரீதியான அறிவிப்பாளரைப் பயன்படுத்துங்கள், மற்றும் விளம்பரத்தை இன்னும் சிறப்பாக்க, பின்னணி இசை மற்றும் துல்லியமான ஒலி அமைப்பான்களை (ஒலி எஃபெக்ட்களை தரும் சாதனங்கள் வழி )பயன்படுத்துங்கள்.
‪#‎வ‬ானொலியில், உங்கள் செய்தி எளிமையாகவும் ஒருமுகப்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும். ஒரு கருப்பொருளைத் தேர்வு செய்யுங்கள், அதையே பின்பற்றுங்கள். ஒன்றை சத்தமாகக் கூறுவதற்கு, அதை வாசிப்பதற்கான நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு சராசரி 30 வினாடி வானொலி விளம்பரத்தில், சராசரியாக 70 சொற்கள் மட்டுமே இருக்க முடியும். 30 வினாடிகளில் குறைந்தது மூன்று முறை நீங்கள் தேர்ந்தெடுத்த விளம்பர நிறுவனத்தின் பொருளை அல்லது பெயரைக் கூறுங்கள்.
நீங்கள் ஒரு உரையைப் பயன்படுத்துவதானால், ஒரு பிரபலமான நபரின் நிகழ்ச்சியில் உங்கள் விளம்பரங்கள் ஒலிபரப்பப்படவேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஒரு நபர் உங்கள் விளம்பரத்தை வாசிக்கும் போது, அது ஒரு சான்றிதழ் போல உணரப்படும். மேலும், அந்த நபர் உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை பற்றி நன்கு அறிந்தவராக இருத்தல் நல்லது, - தேவைப்பட்டால் அவர்களுக்கு விளம்பரத்தின் பொருளை அல்லது விவரங்களின் ஒரு மாதிரியை அனுப்புங்கள்.
ஒரு சிறந்த வானொலி விளம்பரமானது, மற்ற வகை விளம்பரங்களின் அமைப்பிலிருந்து எந்த வகையிலும் அதிகம் வேறுபட்டிருக்காது. இவ்வகையில், முதலில் ஒரு தலைப்புடன் தொடங்குங்கள், நீங்கள் நேயர்களிடம் அடுத்து என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை உணர்த்தும் ஒரு தொடக்க வரியைக் கூற வேண்டும். பின்னர் அதன் தொடர்புடயவைகளை அவர்களிடம் கூறுங்கள். பின்னர், அவர்களிடம் முன்பு நீங்கள் என்ன கூறினீர்களோ அதையே மீண்டும் கூறி நிறைவு செய்யுங்கள். அல்லது உங்கள் விளம்பரங்களை, கூறி அதற்க்கு தக்க ஒரு நடவடிக்கை எடுக்கும்படி கூறி நிறைவு செய்யுங்கள் – மேலும் எங்கள் தயாரிப்பை வாங்குங்கள், எங்கள் இதழை வாங்குங்கள், அல்லது இப்போதே அழையுங்கள், தொடர்பு கொள்ளுங்கள் போன்றவற்றைக் கூறி நிறைவு செய்யுங்கள்.
ஒவ்வொரு வானொலி நிலையத்திற்கும் வேறுபட்ட வகையான விளம்பரங்கள் தேவை. பொதுவாக இதற்க்கு இரண்டு வித பார்வை இலக்கு தேவைப்படுகிறது ஒன்று "பின்புல" நிலையங்கள், என்பவை பின்புலத்தில் இயங்குபவை மற்றும் அவை பொதுவாக அதிகம் விரும்பிக் கேட்கப்படும் பதிவு செய்யப்பட்ட இசை மற்றும் தானியங்கி இசை வானொலி நிலையங்கள்." மற்றொன்று-நேரடி ஒலிபரப்பு சேவை நிலையங்கள். இவை உயிர்ப்புள்ள நேயர்களைக் கொண்டவை. இவற்றில், பேசும் வானொலி, அனைத்து செய்தி வானொலி, அழைப்பு நிகழ்ச்சிகள் போன்றவை. உங்கள் விளம்பரங்கள் நேயர்களின் கவனத்தைக் கவருமாரு உணர்திறன் கொண்டவைகளாக மாற்றவேண்டும். இதற்க்கு பின்வரும் சிறப்பு கட்டுப்பாடுகளை நினைவில் வைத்திருக்கவேண்டும் –ஒரு இசை நிலையத்தில், "வெறும் குரள்" விளம்பரத்தை ஒலிபரப்பாதீர்கள், ஒரு மரபிசை நிலையத்தில், மேற்கத்திய அல்லது நாட்டுப்புற விளம்பரத்தை ஒலிபரப்பாதீர்கள், மற்றும், ஒரு பேச்சு வானொலியில் இசை விளம்பரத்தை ஒலிபரப்பாதீர்கள்.
வானொலியைப் பொருத்தவரை கூறியது கூறல் என்பது, மிக முக்கியம், ஏனெனில் நேயருக்கு உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் பெயர் அல்லது உங்களின் நிகழ்ச்சி பெயர் நன்றாகப் பழகி, நினைவில் நிற்க பல முறை கூறப்பட வேண்டும் அல்லது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்த "மந்திரச்சொல்லாக" அது இருக்கவேண்டும், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு குறிப்பிட்ட உடல் தூய்மைப்படுத்தும் "சோப்பு" ஒன்று "புதிது" என்கிற ஒரு "மந்திர வார்த்தையை-KEY WORDS" மட்டுமே வைத்து விளம்பரப்படுத்திவருகிரார்கள் என்பதை நன்கு கவனித்துப்பார்த்தால் "மந்திரச்சொர்க்களின்-KEY WORDS" வெற்றி எந்த அளவிற்கு உண்மை என்பது உங்களுக்கும் புரியவரும்.
அடுத்த பகுதியில் மீண்டும் சிந்திப்போம் .....வணக்கம்.

வானொலியைப் பொருத்தவரை கூறியது கூறல் என்பது மிக மிக முக்கியம்....

நிகழ்ச்சி தயாரிப்பாளரின் உரையை வாசிப்பது என்பது வானொலியைப் பொருத்தவரை கூறியது கூறல் என்பது மிக மிக முக்கியம்.... 

முன்பெல்லாம் வானொலியின் தமிழ் நேரடி வர்ணனையில் கிரிக்கெட் விளையாட்டு , திருச்செந்தூர் சூரசம்ஹாரம், மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் காட்சி மற்றும் பல முக்கிய கோவில் கும்பவிஷேகங்கள் மற்றும் திருவிழாக்கள் நேரடி வர்ணனை செய்யப்பட்டது. 

ஒருமுறை பிரிட்டிஷ் மகாராணியார் இலங்கை விஜயத்தின் போதான இலங்கையின் தமிழ் வானொலி வர்ணனையிலும் சுவாரசியமான சங்கதிகள் நடந்தது. "ஆபரணங்கள் ஏதும் அணியாமல் எளிமையான வெள்ளையுடுப்பில் வருகிறார்" என்று சொல்ல நினைத்த வர்ணனையாளர், வாய் தடுமாறி ஆடை ஆபரணங்கள் இல்லாமல் மகாராணியார் அழகாக வருகின்றார் என்று வர்ணித்துவிட்டார். எப்படி இருக்கும்? பத்திரிகைகள் சும்மா விடுமா? ..........................

வானொலியின் நேர்முக ஒலிபரப்பில், நேரடி வர்ணனை என்பது மிகவும் கடினமானதும் நன்கு அனுபவம் பெற்றிருந்தாலும், சில நேரங்களில் தர்ம சங்கடமான சூழ்நிலைகளும் வர்ணனைகள் தொடர்பான கஷ்டங்களும், தொழில்நுட்பப இடைஞ்சல்களும் ஏற்ப்படும்.

ஆனால் ஒரு பிரபல பத்திரிகை ஒன்று  1997 -ல் வேண்டுமென்றே இப்படி ஒரு தலைப்புச்செய்தியை தந்தது "திருமதி இந்திராகாந்தி அவர்கள் 'ஜட்டியுடன் டெல்லியை பவனி வந்தார்" என்று அதாவது 1977-ல் திரு ஜட்டி என்கிற முழுப்பெயர் "பாசப்பா தானப்பா ஜட்டி" இந்திய ஜனாதிபதியாக இருந்தார் (Basappa Danappa Jatti Acting President of India In 11 February 1977 – 25 July 1977). 

விளைவு பத்திரிகை விற்பனை.....................முக்கியமாக யார் மனதையும் புன்படுத்துவதர்க்காக இங்கு இதை தெரியப்படுத்தவில்லை... நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும் செய்தி சேகரிப்பது குறித்த சில நாகரீக நுணுக்கங்களை கற்றுத் தெரிந்துகொண்டவர்கள் இப்படிப்பட்ட தவறுகளுக்கு ஆளாகமாட்டார்கள். 

ஆகவே நிகழ்ச்சி தயாரிப்பது மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என்பது அத்தனை எளிய வேலை கிடையாது. அதற்க்கென்று தனிப்பட்ட விருப்பமும் பயிற்சியும் பெற்றிருக்கவேண்டியது அவசியம். 
  
இப்படி நிகழ்ச்சி தயாரிப்பில் பல எதிர்பாராத அனுபவங்களும் கிடைக்கும்......

ஒரு நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு அவசியம் தெரிந்திருக்கவேண்டிய

ஒரு நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு அவசியம் தெரிந்திருக்கவேண்டிய தமிழ் ஆங்கில அகராதி குறிப்புகள் :-
# உள்ளிடை நிகழ்ச்சி local action
# எடுத்துக்காட்டு; சான்று நிகழ்வு; நிகழ்ச்சி instance
# எதிர்த்தியங்கு நிகழ்ச்சி reversible process
# எதிர்பாரா நிகழ்ச்சி, விபத்து accident
# எதிர்பாரா நிகழ்ச்சி; உறுதியற்ற பின் நிகழ்வு; தற்செயல் unexpected event / instance
# ஒளிமின் நிகழ்ச்சி photoelectric phenomena
# கன்னி நிகழ்ச்சி / முன்னோடி / வெள்ளோட்டத் திட்டம் pilot programme
# கலை நிகழ்ச்சி cultural performance
# கூட்டு நிகழ்ச்சி compound event
# கேளிக்கை , பொழுதுபோக்கு நிகழ்ச்சி, வேடிக்கை amusement
# கொடை நிகழ்ச்சி benefit performance
# கொடைக் கலை நிகழ்ச்சி benefit performance
# சமூக இடைவினை, சமூக ஊடாட்டம, உள்ளிடை நிகழ்ச்சி social interaction
# சாதக நிகழ்ச்சி favourable event
# சார்பற்ற நிகழ்ச்சி independent event
# சார்புடை நிகழ்ச்சி dependent event
# சிறப்பு நிகழ்ச்சி special performance
# செயலாக்கம்; நிறைவேற்றம் performance
# நிகழ்ச்சி function
# செய்துகாட்டல்; செயல்முறை விளக்கம்; ஆரவார நிகழ்ச்சி demonstration
# தவறான நினைவு, நடக்காத நிகழ்ச்சி, நினைவு paramnesia
# திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல் revised agenda
# துயர நிகழ்ச்சி tragedy
# தொகுப்பாளர் editor (news, etc)
# தொலை நிலைப்பிணைப்பு நிகழ்ச்சி network programme
# தொலைக்காட்சி நிகழ்ச்சி telecast
# தொழில் முனைவர்; தொழிலக உரிமையாளர்; பொழுது போக்கு நிகழ்ச்சி அமைப்பாளர் entrepreneur
# தொழில் முனைவோர், நிகழ்ச்சி அமைப்பாளர் entrepreneur
# நாடக நிகழ்ச்சி dramatic performance
# நிகழ்ச்சி event
# நிகழ்வு /நிகழ்ச்சி incidence
# துல்லியமான நிகழ்ச்சி occurrence
# நிகழ்ச்சி -நிறைவேற்றம / செயலாக்குதல் performance
# நிகழ்ச்சி உந்து சூழல் event-driven environment
# நிகழ்ச்சி உந்து செய்நிரல் event-driven program
# நிகழ்ச்சி உந்து மொழி event-driven language
# நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு programme co-ordination
# நிகழ்ச்சி நிரல் agenda
# நிகழ்ச்சி நிரல்; திட்டம்; செயல் முறைத் திட்டம் programme
# நிகழ்ச்சி பதிதாள் , நிகழ்வு பதிதாள் log sheet
# நிகழ்ச்சி; செயலாக்கம்; நிறைவேற்றம் performance
# பணித்திட்டம் / நிகழ்ச்சி நிரல் programme
# பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்ச்சி cultural exchange programme
# பதிப்பாளர்; பதிப்பாசிரியர்; தொகுப்பாளர்; இதழாசிரியர் editor
# பல்சுவைக் கேளிக்கை நிகழ்ச்சி variety entertainment
# பெறுவழி(இ.வ)/அணுகல்(த.வ) நிகழ்ச்சி access event
# பொருண்மை; மெய்ம்மை நிகழ்ச்சி fact
# மணஓப்பந்தம் / நிகழ்ச்சி engagement
# மிகுவிரைவுச் செயல் திட்டம் நிகழ்ச்சி crash programme
# முந்திய நிகழ்ச்சி antecedent
# முன்நிகழ்வு; முன் நிகழ்ச்சி; முற்சான்று antecedence
# மோதல் நிகழ்ச்சி collision process
# வரவேற்பு நிகழ்ச்சி reception
# வினா விடை நிகழ்ச்சி quiz programme
# விழா; நிகழ்ச்சி; செய்கடமை; செயல்பாடு function
# வெப்பம் (அ) மின்சக்தி, கடத்தி நிகழ்ச்சி நடத்துநர் conductor
# வேறுபாட்டு நிகழ்ச்சி, முரண்பட்ட நிகழ்வு contrastphenomenon 

விளக்கம் கேட்டு விசாரணை செய்யுமாறு இந்திய ஜனாதிபதி அலுவலகம்.....

அப்போது செப்-12-2013 அன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் இந்திய துணை ஜனாதிபதி திரு ஹமீது ஹன்சாரி அவர்களுக்காக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் (ஸ்ரீ நாராயணகுரு சர்வதேச விருதுவழங்கும் விழா)...ஏற்ப்பட்ட ஒரு நிகழ்வு இது...

"அரசாங்க அல்லது அரசு சார்ந்த நிகழ்ச்சியை ஏற்று நடத்துவது என்பது அத்தனை எளிமையான செயல் இல்லை" 

அரசு முக்கியஸ்தர் கலந்துகொள்ளும் விழா வழக்கப்படி, நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும் இறுதியிலும் தேசியகீதம் பாடப்படுவது மரபு. 

நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு இந்த விவரம் தெரியாது போனதால் அவசரத்தில் வேறு யாரும் முன்வராததால் அவரே மேடை ஏறி பதட்டத்தில் தப்பும் தவறுமாக பாட...... 

அதோடு நிகழ்ச்சி வர்ணனையாளர் பேசுகையில் " நமது துணை ஜனாதிபதி ஏப்பரல் 1ஆம் தேதி (முட்டாள்கள் தினம்) அன்று பிறந்தார், அன்றைய தினத்தின் முக்கியத்துவம் பற்றி நமக்கு நன்கு தெரியும். ஆனால் அன்றைய தினத்தில் பிறந்த நமது துணை ஜனாதிபதி ஒரு புத்திசாலி" என்று கூற.....


விளைவு அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த கமிட்டி நிர்வாகி மற்றும் விழாவின் வர்ணனையாளர் இருவரையும் விளக்கம் கேட்டு விசாரணை செய்யுமாறு இந்திய ஜனாதிபதி அலுவலகம் கேரளா தலைமைச்செயலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது............ 


ஆகவே நிகழ்ச்சி தயாரிப்பு என்பது அவ்வளவு எளிய வேலை இல்லை அதற்க்கென்று தனி அனுபவ அறிவு அவசியம் தேவை.......வாருங்கள் நமது நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறைக்கு ............

"மருத்துவ சிகிச்சைக்கு திட்டமிடுதலில் " அதுதான் முதல் அனுபவமும்கூட.....

அப்போது 1985-87, நான் டாக்டர் ராதா கிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளியில் (நான் படித்த அதே பள்ளியில்) பகுதிநேர ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த நேரம். முன்பு நான் மாணவனாக அதே பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது எனக்கு மேல்நிலைக்கல்வி "தாவரவியல்" ஆசிரியராக இருந்தவர்................................. " திரு ந.கிருஷ்ண சுவாமி சார் (சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கிறார்) என்னிடம் 15 நாட்கள் விடுப்பில் அவரது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான" தேசிய நிறுவனம் (NIMHANS) பெங்களூருவுக்கு சென்றுவர உடன் உதவிக்கு வருமாறும், அதற்குத்தேவையான திட்டமிடவேண்டும் என்று என்னுடைய உதவியை கேட்டபோது, பள்ளி கலைக்கல்வி நாடகக்குழு நிகழ்ச்சி தயாரிப்பில் உதவியாக இருந்த எனக்கு "மருத்துவ சிகிச்சைக்கு திட்டமிடுதலில் " அதுதான் முதல் அனுபவமும்கூட.....
ஆசியாவிலேயே புகழ் பெற்று விளங்கும், இந்தியாவின் சிறந்த மற்றும் முதன்மையான மனநல சுகாதார நிறுவனமான "மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான" தேசிய நிறுவனம் (NIMHANS-National Institute of Mental Health and Neuro Sciences) பெங்களூரில் அமைந்துள்ளது." இதைப்போலவே மற்றொன்று புது தில்லியில் இருக்கும் "விம்ஹான்ஸ்"(VIMHANS -Vidyasagar Institute of Mental Health, Neuro & Allied Sciences) வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இந்த இரண்டு இடங்களையும் சுற்றிப்பார்த்த என்னுடைய அனுபவம், என் மனதை நெகிழவைத்த அனுபவமும்கூட.............. அங்கு சிகிச்சை பெறுபவர்கள் சராசரி நோயாளிகள் போல இருந்தாலும் சிறு அளவிலான மூளைக் குறைபாடு அல்லது நரம்பியல் குறைபாடு உடையவர்கள்’ என்று அங்கு பணியாற்றும் மருத்துவர் ஒருவர் சொன்னபிறகுதான் தெரிந்தது................

‘‘பெங்களூரு தேசிய மனநல மருத்துவம் மற்றும் நரம்பியல் விஞ்ஞான (நின்ஹான்ஸ்) மையத்தோடு சில மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திய ஆய்வில்... இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 30% சதவிகித குழந்தைகள் மூளை வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் தகவல் தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து பெற்றோர்களும் பெரிதாக கவலைப்படவில்லை என்பதுதான் கூடுதல் கொடுமை.

மன அழுத்த நோயை எப்படி அளவிடுகிராரர்கள்?.... மனவியல் நோய்களை தீர்க்கும் வழிமுறைக்கு, சரியாக திட்டமிடுதலும் அந்நோய்களைப் பற்றிய முழு விவரங்களைக் தெரிந்துகொண்டு முழுமனதோடு உதவி புரிதலும் கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஒரு நபரின் மன அழுத்த நிலையை, அட்ரீனல் சுரப்பி சுரக்கும் இரண்டு இரசாயனங்களான கார்டிசால் (cortisol) மற்றும் DHEA (dehydroepiandrosterone) ஆகியவற்றை அளப்பதன் மூலம் அறியலாம்.

ஹொம்ஸ் ராகே அளவீட்டின்படி (Holmes and Rahe Stress Scale), வாழ்க்கையை மாற்றும் விதத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த (Life Change Units) எண்ணிக்கையை சேர்த்து இறுதி மதிப்பீடு செய்யப்படுகிறது. உதாரணமாக, கணவன் அல்லது மனைவியின் இறப்பு ஏற்பட்டிருந்தால், அதற்கு 100 மதிப்பெண்கள் தரப்படும்.
*கூட்டு மதிப்பெண்கள் 300+ ஆக உள்ளபோது நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
*150-299 கூட்டு மதிப்பெண்கள் – நோய்க்கு ஆளாகும் அபாயம் 30% வரை குறைவு.
*150 கூட்டு மதிப்பெண்கள்- நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.


மனநோய் வராமல் தடுக்க "புத்துணர்ச்சியாக இருப்பது" ஒன்றே சிறந்த வழி. ஆகவே புத்துணர்ச்சி பெற ஏற்ற ஆரோக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும். 
கீழ் கண்ட சில வழிமுறைகளை தினமும் சிறிது நேரம் ஒதுக்கி நடை பயிற்சிக்கு செல்லவும், 
இயற்கையில் அதிக நேரத்தை செலவிடவும், 
நல்ல நண்பரை அழைத்து பேசுங்கள்,
நன்கு வேலை செய்து பதற்றத்தைக் குறையுங்கள்,
விருப்பத்தை உங்கள் புத்தகத்தில் எழுதுங்கள்,
நீண்ட குளியலில் ஈடுபடவும்,
மனமுள்ள ஊதுவத்தி-மெழுகுவத்திகளை ஏற்றுங்கள்,
சூடாக காபி அல்லது தேனீர் பருகவும்,
செல்லப்பிராணிகளுடன் விளையாடவும்,
உங்கள் தோட்ட்த்தில் வேலைகள் செய்யவும்,
உடலுக்கு மசாஜ் செய்துகொள்ளவும்,
விரும்பிய நல்ல புத்தகத்தை படியுங்கள்,
நல்ல இசையை கேளுங்கள்,
நகைச்சுவை நிகழ்ச்சிகளை பாருங்கள்,
பொழுதுபோக்குக்கு நேரம் ஒதுக்குங்கள்: பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுக்கு உங்கள் அன்றாட வேலைத்திட்டத்தில் இடமளியுங்கள். இந்த நேரத்தில் பொறுப்புகளை மறந்து புத்துணர்வு பெறுங்கள்.

பிறருடன் பழகுங்கள்: நேரிடை சிந்தனையுள்ள மக்களுடன் பழகுங்கள். இதனால் எதிர்மறை எண்ணங்களை குறைக்க முடியும்.

நீங்கள் விரும்பும் ஏதாவதொன்றை தினமும் செய்யுங்கள்: உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நடவடிக்கைகளில் (உதாரணமாக இசை, பிரயாணம் போண்றவை) ஈடுபடுங்கள்.

நகைச்சுவை உணர்ச்சியை பாதுகாத்துக் கொள்ளுங்கள்: உங்களை நீங்களே உங்களை புரிந்துகொண்ட கேலி செய்துகொள்ளும் நிலைக்கு வர முயலுங்கள். 


சிரிப்பு பல வழிகளில் மன இறுக்கத்தை குறைக்கிறது........

ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு :-
1. உணவுமுறையை சரிபடுத்துங்கள்: பிற சத்துக்களைப் போலவே, B வகை வைட்டமின்கள் மற்றும் மக்னீஸியம், வைட்டமின் C ஆகியவையும் மன இறுக்கத்தை குறைக்க அவசியத் தேவையாகும். எலும்புகள் வலுப்பெற வைட்டமின் D உதவுகிறது. ஆரோக்கியமான உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு பலவித தாதுப்பொருட்கள் முக்கியம். தற்பொதைய உணவு முறையை ஆய்வு செய்து, அவற்றிலுள்ள குறைகளை நீக்குங்கள். கேக் வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக உப்பு, மாத்திரைகள் ஆகியவற்றை கூடுமானவரை தவிர்க்கவும்.

2. நச்சுத்தன்மை உடைய பொருட்களை குறையுங்கள்: புகையிலை, மது ஆகியவை தற்காலிகமாக மன இறுக்கத்தை குறைக்குமாறு தோன்றினாலும், உடல் சமநிலையை பாதிக்கின்றன.

3. உடற்பயிற்சியை அதிகப்படுத்துங்கள்: பொதுவாகவும், இறுக்கமாக உணரும்போதும், உடற்பயிற்சி செய்யுங்கள்: தினமும் செய்யும் உடற்ப்பயிர்ச்சி, அட்ரீனலின் அளவை குறைத்து, உதவிகரமான இரசாயனங்களை உற்பத்தி செய்து நன்மை அளிக்கும். மேலும் மன அழுத்தம் உண்டாக்கும் காரணிகளை குறைக்கிறது. அதோடு இறுகிய தசைகளை இளக்குகிறது,
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது,
உடல் நலத்தை சீராக்குகிறது.

4. சுய குணங்கள் மற்றும் உணர்வுகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இறுக்கம் உண்டாகும் சூழ்நிலைகளை அறிந்து, அவற்றை சந்திக்க தயாராக இருங்கள். யோகா, தியானம், ஹிப்னாடிசம், மசாஜ் போன்ற இறுக்கம் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.

5. தூக்கம் மற்றும் ஓய்வு நல்ல சமநிலையான உடல்நிலைக்கு அவசியம். பகலில் குட்டித் தூக்கம் போடுவதும் நல்லதே. இதனால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. தேவையில்லாத எண்ணங்கள் குறைகிறது.

6. வேலை செய்யும் இட்த்தில் கோபமடைவது, மன இறுக்கத்தின் அறிகுறி. சம்பந்தபட்ட நபர் ஒப்புக்கொள்ளுதல், காரணமறிதல், ஈடுபாடு, ஆகியவை மூலம் மாற்றத்தை விரும்பினால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும். 


விழிப்புணர்வே முதல் படி. சிலர், தங்கள் கோபம் பற்றி பெருமைப்பட்டு, மாற விரும்புவதில்லை. சிலர் கோபத்தால் பிறர் பாதிக்கப்படுவதை உணருவதில்லை. அடிப்படை காரணத்தை கண்டறிய தக்க ஆலோசனைகள் தேவை. 

தங்கள் சுய விருப்பு வெறுப்பின்றி, அடுத்தவர் பாடிப்புக்களையும் உணர்ந்து, கோபம் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் சிந்திக்க வேண்டும். கோபப்படுவோருக்கு இத்தகைய உணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். கோபத்தால் உடல்நிலை மற்றும் குடும்பத்தினர் பாதிக்கப்படுவதை அவர்களுடன் விவாதியுங்கள். தங்களை விட்டு விலகி நின்று தங்களையே விமர்சிக்கும் அளவுக்கு அவரை மாற்றுங்கள். 

அடுத்து, கோபம் ஏற்படுத்தும் காரணிகளை அறிந்து அவற்றை தவிர்க்க வேண்டும். ஆலோசனை வழங்குபவர், ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களை அவருடன் செலவழித்து, அவர் நம்பிக்கையை பெற்று, அவருக்கு வழிகாட்ட வேண்டும்..... தொடரும்....

பல குடும்பத்தில் தாத்தா-பேரன்-மகன் என மூன்று தலைமுறையினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.......

முகநூளில் 05-நவம்பர்-2013 பதிவு...... 
சுவாமி விவேகானந்தர் பிறந்து 149 ஆண்டுகள் நிறைவுற்று 150ஆவது (2013-2014) பிறந்த வருடம் துவங்கியுள்ளது. சுவாமிஜி அவர்கள் தவமிருந்த குமரிமுனைக்கு அருகில் குமாரபுரம் என்னும் கிராமத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி தயாரிப்பு குறிப்பிலிருந்து சில தகவல்கள். 

இந்நிகழ்ச்சியில் கலந்து பங்கேற்றிட அவரவர்கள் தங்கள் சொந்த செலவில் பேருந்துகள் வேன்கள் கார்கள் வாயிலாக வந்தனர். மொத்தம் 2,948 வாகனங்களில் வந்திருந்தனர். அதில் 267 பேருந்துகள், 1,930 வேன்கள், 320 கார்கள், 396 இரு சக்கர வாகனங்கள்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு வழங்கிட 2 லட்சம் சப்பாத்திகள் 1 லட்சத்து 46 ஆயிரம் இட்லி தயாரிக்கப்பட்டது. 19 மணிநேரத்தில் வெறும் 8 பேர் மட்டும் இப்பணியில் ஈடுபட்டனர். இந்த இட்லி தயாரித்திட 606 கிலோ மாவு உபயோகப் படுத்தப்பட்டது. இது கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது. 


அதிக இட்லி தயாரித்து சாதனை படைத்தவர் கோவையைச் சேர்ந்த சமையல் ஒப்பந்தக்காரர் திரு.சரவண மாணிக்கம் ஆவார். இவரது சாதனையை அங்கீகரித்து Elite World Record அமைப்பின் பிரதிநிதி பாலநாக சாய்கிருஷ்ணன் அவர்கள் சான்றிதழ் வழங்கினார். 


நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தின் அருகில் டாஸ்மாக் (மதுபான) கடை இருந்தும் கூட நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஒருவர் கூட அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்று நிகழ்ச்சிக்கு வந்திருந்த தொலைகாட்சி நிருபர் ஒருவர் கூறினார்.
மொத்தம் 2,542 கிராமங்களில் இருந்து நிகழ்ச்சிக்கு மக்கள் வந்திருந்தனர். 
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தருகில் மொத்தம் 2,948 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. எவ்விதமான இடையூறுகளும் இன்றி வாகனங்கள் சுமுகமாக வந்து சென்றன. அதைப் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கோ பெரும் ஆச்சரியம். சங்க ஏற்பாட்டினை அவர்கள் பாராட்டினர். 


காவல் துறையினர் நூற்றுக் கணக்கில் பாதுகாவலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அங்கு எவ்வித வேலையும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இல்லை. உயர் அதிகாரிகள் உட்பட அனைவரும் சங்க நிகழ்ச்சிகள் எப்படி திட்டமிட்டபடி எவ்வித குழப்பமும் இன்றி குறிப்பிட்ட நேரத்தி துவங்கி நடைபெறுகிறது என்பதை கவனித்தனர்.

பல குடும்பத்தில் தாத்தா-பேரன்-மகன் என மூன்று தலைமுறையினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்....... 

ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்

வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே.....
ஒரு ஊரில் , ஒரு ராஜா !
ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.
அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.
இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.
இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.
மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''
தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''
கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.
மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.
படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''
''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''
''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''
''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''
''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''
''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.
மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!
நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.
ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?
பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.
ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!
அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே.....
Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.